May 6, 2026
Thisaigal NewsYouTube
லாஹாட் டத்து: கழிவுநீர்க் குழாய் பள்ளத்தில் பாய்ந்தது பிக்கப் வாகனம்  - ஒருவர் பலி; மற்றொருவர் காயம்
தற்போதைய செய்திகள்

லாஹாட் டத்து: கழிவுநீர்க் குழாய் பள்ளத்தில் பாய்ந்தது பிக்கப் வாகனம் - ஒருவர் பலி; மற்றொருவர் காயம்

Share:

லாஹாட் டாத்து, ஜனவரி.23-

சபா, லாஹாட் டாத்துவில் உள்ள ஜாலான் பந்தாய் பகுதியில் இன்று காலை பிக்கப் வாகனம் ஒன்று கட்டுமானப் பணிக்காகத் தோண்டப்பட்டிருந்த ஆழமான பள்ளத்தில் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

இன்று காலை 7 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில், வாகனத்தில் பயணித்த அல்மாடி ஹசான் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக உறுதிச் செய்யப்பட்டது. வாகனத்தை ஓட்டிச் சென்ற வில்யாமில் அஹாஜுல் என்பவருக்குக் கை முறிவு ஏற்பட்டது.

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், லாஹாட் டாத்து தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த 14 வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

சபா கழிவுநீர் மற்றும் வடிகால் துறையினரால் தோண்டப்பட்டிருந்த அந்தப் பள்ளத்தைச் சுற்றி வைக்கப்பட்டிருந்த சாலைத் தடுப்புகளை மோதித் தள்ளியபடி, வாகனம் பள்ளத்திற்குள் பாய்ந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தீயணைப்பு, மீட்புத்துறையினர் தெரிவித்தனர்.

Related News

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்