Mar 19, 2026
Thisaigal NewsYouTube
ஆசிரியர்களின் மதிப்பை மீட்டெடுக்க வேண்டும் - பினாங்கில் பொதுமக்கள் பேரணி!
தற்போதைய செய்திகள்

ஆசிரியர்களின் மதிப்பை மீட்டெடுக்க வேண்டும் - பினாங்கில் பொதுமக்கள் பேரணி!

Share:

ஜார்ஜ்டவுன், அக்டோபர்.26-

மாணவரைப் பிரம்பால் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு ஆசிரியர்களுக்கு ஆதரவு தெரிவித்து, இன்று ஒரு பள்ளியின் வளாகத்தில் சுமார் 300 பேர் திரண்டனர். அங்கிள் கெந்தாங் என்று அறியப்படும் சமூக செயற்பாட்டாளர் குவான் சீ ஹெங் ஏற்பாடு செய்த இந்தப் பேரணியில், ஆசிரியர்கள் மீதான மரியாதை மீட்டெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

"ஆசிரியர்களைக் குற்றவாளிகளைப் போல் நடத்தாதீர்கள்", "உங்களுக்குக் கற்பித்தவர்களை மதியுங்கள்" போன்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியவாறு அவர்கள் ஆசிரியர் சமூகத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். தேசிய ஆசிரியர் சேவைகள் சங்கம் – என்யுடிபி, இந்த நடவடிக்கையை ஆதரித்ததுடன், ஆசிரியர்களுக்கு நியாயமான முறையில் மதிப்பளிக்கவும், பள்ளிகளில் பிரம்படி வழங்கும் கொள்கையை மறுபரிசீலனை செய்யவும் கோரிக்கை விடுத்தது. ஆசிரியர்கள் பயமின்றித் தங்கள் கடமைகளைச் செய்ய அனுமதிக்கும் வகையில், அவர்களின் பங்கு மற்றும் அதிகாரத்தின் வரம்புகளைச் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும் என்று என்யுடிபி பொதுச் செயலாளர் ஃபாட்லி அஹ்மாட் வலியுறுத்தினார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை