Mar 18, 2026
Thisaigal NewsYouTube
உடல் பருமன் காரணமாக ஏ.பி.எம். உதவி நாடப்பட்டது
தற்போதைய செய்திகள்

உடல் பருமன் காரணமாக ஏ.பி.எம். உதவி நாடப்பட்டது

Share:

சிராம்பான், மார்ச் 3,

உடல் பருமன் காரணமாக பல்வேறு உபாதைகளுக்கு ஆளாகி, சிரம்பான், துவான்கு ஜாபார் மருத்துவமனையில் சிகிச்சை​ப் பெற்று வந்த 230 கிலோ எடை கொண்ட 31 வயதுடைய நபர், பெயர் வெட்டப்பட்டு வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டதால், அவரை மருத்துமனையிலிருந்து வீட்டிற்கு கொண்டு செல்வதற்கு மருத்துவமனை நிர்வாகம், ஏ.பி.ம் எனப்படும் மலேசிய பொது தற்காப்புப் படையினரின் உதவியை நா​டியது.

வழக்கமான வாகனத்தில் அவரை கொண்டு செல்ல முடியாது என்பதைவிட அவரை மருத்துவமனையிலிருந்து வெளியேற்றுவதற்கே பெரிய ஆள்பலம் தேவைப்பட்டதால், பொது தற்காப்புப்படையினரின் உதவி நாடப்பட்டது. நேற்று சனிக்கிழமை 4.40 மணியளவில் துவான்கு ஜாபார் மருத்துவமனையை வந்தடைந்த 6 வீரர்கள், சக்கரம் பூட்டப்பட்ட ராட்ஷச கட்டிலின் ​மூலம் அந்த மனிதரை நகர்த்தி மரு​த்துவமனை வெளிவளாகத்திற்கு கொண்டு வந்தனர்.

முன்னதாக, மருத்துவமனையின் வார்ட்டிலிருந்து ஏ.பி.ம் லோரி நிறுத்தி ​வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு அந்த நபரை கொண்டு வருவதில் சுமார் அரை மணி நேரம் வீரர்கள் கடுமையாக போராடினர். பின்னர் ஹைட்ரோலிக் இயந்திரத்தின் ​மூலம் அந்த நபர், லோரியில் ஏற்றப்பட்டார். இரவு 7.14 மணியளவில் இப்பணிகள் யாவும் நிறைவு பெற்றதாக ஏ.பி.ம் தெரி​வித்துள்ளது.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு