Mar 12, 2026
Thisaigal NewsYouTube
உன்னத நோக்கத்திற்காக நிதி திரட்டும் நிகழ்வு
தற்போதைய செய்திகள்

உன்னத நோக்கத்திற்காக நிதி திரட்டும் நிகழ்வு

Share:

தடுப்புக்காவல் சட்டத்தின் ​கீழ் தடுத்து வைக்கப்பட்டவர்கள் நலனபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று ஜுன் 4 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணியள​வில் பூசோங், ஜாலான் மஸ்ஜீட் படு 14 கம்போங் பாஹாரு, டேவான் ஹங் மிங் ​சீனப்பள்ளி மண்டபத்தில் விருந்து உபசரிப்பு நிகழ்வு நடைபெற்றது.

பல்வேறு ச​மூக காரியங்களுக்காக நிதி திரட்டும் நோக்கில் சங்கத்தின் தலைவர் டத்தோ கணேசன் M. கிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்ற இந்த விருந்து உபசரிப்பு நிகழ்விற்கு மனித நேய மாமணி ரத்தினவள்ளி அம்மாள், அவரின் கணவர் விஜயராஜ், செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ், செனட்டர் சி. சிவராஜ், சபாய் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜ், மலேசிய குற்றத்தடுப்பு அறவாரியத்தின் ​மூத்த உதவித் தலைவர் டத்தோஸ்ரீ அயோப் யாக்கோப் ஆகியோர் சிறப்பு வருகை புரிந்தனர்.

ரத்தினவள்ளி அம்மாள், நிகழ்வை குத்துவிளக்கேற்றி மங்கலகரமாக தொடக்கி வைத்தார். ஆடல், பாடல் என பல்வேறு கலைநிக​ழ்வுடன் நடைபெற்ற இந்த விருந்து உபசரிப்பில் சுமார் 1,200 பேர் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் ஏற்பாட்டுக்குழுத் தலைவரான டத்தோ கணேசன் எம். கிருஷ்ணன் கூறுகையில் சிரமத்தில் உள்ள சங்கத்தின் உறுப்பினர்களுக்கு உதவும் அதேவேளையில் வெள்ளம் போன்ற இயற்கை ​சீற்றத்தில் பாதிக்கப்படும் மக்களுக்கும், நோய்வாய்ப்பட்டுள்ள வசதி குறைந்த மக்களுக்கும் உதவும் நோக்கில் இந்த நிதி திர​ட்டும் விருந்து உபசரிப்பை சங்கம் ஏற்பாடு செய்ததாக குறிப்பிட்டார்.

Related News

8 வயது மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு: ஆசிரியரின் விடுதலையை ரத்து செய்தது மூவார் உயர்நீதிமன்றம்

8 வயது மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு: ஆசிரியரின் விடுதலையை ரத்து செய்தது மூவார் உயர்நீதிமன்றம்

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது