Mar 16, 2026
Thisaigal NewsYouTube
செபூத்தே, தாமான் யுனைடெட் அடுக்ககத்தில் நிலச்சரிவு: பாதிக்கப்பட்டோருக்குத் தற்காலிக வீடு!
தற்போதைய செய்திகள்

செபூத்தே, தாமான் யுனைடெட் அடுக்ககத்தில் நிலச்சரிவு: பாதிக்கப்பட்டோருக்குத் தற்காலிக வீடு!

Share:

கோலாலம்பூர், நவம்பர்.30-

கடந்த நவம்பர் 26 ஆம் தேதி செபூத்தே, தாமான் யுனைடெட் அடுக்ககத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஆபத்தில் உள்ள 52 குடியிருப்பாளர்களுக்குத் தற்காலிக வீடுகளை வழங்கக் கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் தயாராக உள்ளது. பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு அருகில் சீரமைப்பும் பழுதுபார்க்கும் பணிகளும் தொடங்கப்பட்டு விட்டப. இந்தப் பணிகள் சுமார் ஒரு மாத காலத்திற்குள், அதாவது டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸாலிஹா முஸ்தஃபா தெரிவித்தார்.

குடியிருப்புகள் 40 ஆண்டுகளைத் தாண்டியிருத்தல், அருகில் நடக்கும் கட்டுமானப் பணிகளும் வேர்கள் ஆழமாகச் சென்ற மரங்களாலும் நிலச்சரிவு ஏற்படக் காரணமாக இருக்கலாம் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தப் பணிகள் வெற்றிகரமாக முடிந்தால், குடியிருப்பாளர்கள் அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் ஸாலிஹா உறுதிப்படுத்தினார்.

Related News

செபூத்தே, தாமான் யுனைடெட் அடுக்ககத்தில் நிலச்சரிவு: பாதிக... | Thisaigal News