Apr 28, 2026
Thisaigal NewsYouTube
சட்டவிரோத கேளிக்கை விடுதிக்கு பாதுகாப்பு: மூத்த போலீஸ் அதிகாரி கைது
தற்போதைய செய்திகள்

சட்டவிரோத கேளிக்கை விடுதிக்கு பாதுகாப்பு: மூத்த போலீஸ் அதிகாரி கைது

Share:

பகாங் மாநிலத்தில் சட்டவிரோத கேளிக்கை விடுதிகளுக்கு பாதுகாப்பு வழங்க, சுமார் 64,000 ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக சந்தேகிக்கப்படும் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டு ஐந்து நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

50 வயது மதிக்கத்தக்க அந்த அதிகாரி, 2020 முதல் 2023 வரை இரண்டு விடுதி உரிமையாளர்களிடமிருந்து தனது தனிப்பட்ட வங்கி கணக்கு மூலம் மாதாந்திர லஞ்சப் பணத்தைப் பெற்றதாகத் தெரிகிறது.

நேற்று அந்த மூத்த அதிகாரியின் இல்லத்தில் கைது செய்யப்பட்ட அவரை, மே 2-ஆம் தேதி வரை விசாரிக்க குவாந்தான் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஊழல் தடுப்பு ஆணையமான SPRM இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகிறது.

Related News