மலேசிய குடிகுடியுரிமையை பயன்படுத்தி, வர்த்தக லைசென்ஸ் பெற்று,அதனை அந்நிய நாட்டவர்களுக்கு வாடகைக்கு கொடுக்கும் உள்ளூர் பிரஜைகள், அலிபாபா தடுப்பு சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவதற்கு புதிய சட்டம் ஒன்று பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொருளாதார அமைச்சர் ரஃபிசி ரம்லி தெரிவித்தார்.
தங்களுக்கான சலுகைகரள , உரிமையை அந்நிய நாட்டவர்களுக்கு தரைவார்த்து கொடுத்து, உட்கார்ந்த வாக்கிலேயே சம்பாதிப்பதற்கு அதிகமான வர்த்தக லைசென்சுகளை வைத்து இருக்கும் உள்ளூர்வாசிகளின் வர்த்தக லைசென்ஸை முடக்குவதற்கு இந்த அலிபாபா தடுப்பு சட்டம் முன்மொழியப்ப்டடுள்ளதாக ரஃபிசி ரம்லி விளக்கினார்.
கோலாலம்பூர் மாநகர் உட்பட பல்வேறு வர்த்தக வியூகம் நிறைந்த பகுதிகளில் அந்நிய நாட்டவர்கள் அதிகளவில் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதற்கு நாட்டில் உள்ள சட்டங்களில் காணப்படும் ஓட்டைகள் மற்றும் சட்ட அமலாக்கத்தில் உள்ள பலவீனங்களே முக்கிய காரணமாகும் என்று கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் பதில் அளிக்கையில் ரஃபிசி ரம்லி மேற்கண்டவாறு கூறினார்.








