Aug 2, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் இராணுவ வீரரின் சடலத்தைக் கண்டெடுத்த 2 இளைஞர்கள்
தற்போதைய செய்திகள்

முன்னாள் இராணுவ வீரரின் சடலத்தைக் கண்டெடுத்த 2 இளைஞர்கள்

Share:

மலாக்கா, பார்க் இண்டா, சுங்கை உடாங் பகுதியில் உள்ள ஏரியில் 42 வயதான முன்னாள் கமாண்டோ வீரரின் சடலத்தை அங்கு மீன் பிடிக்கச் சென்ற இரு 14 வயது இளைஞர்கள் கண்டெடுத்தனர்.

இது குறித்து தகவல் அளித்த அலோர் காஜா காவல் துறை தலைவர் அர்ஷத் அபு கூறிகயில், அந்த இளைஞர்களின் தந்தையார் சடலம் குறித்து காவல் துறையில் புகார் அளித்ததாகக் கூறினார்.

இறந்து போனவர் கேம் சுங்கை உடாங் இல் கமாண்டோ அதிகாரியாக இருந்ததாகவும் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும் அர்ஷத் அபு கூறினார்.

ஒரு மாதம் முன்னர்தான் அவருக்கு விவாகரத்து ஆனதாகவும் இரு நாட்களுக்கு முன்னர் காலை 9.00 மணி அளவில் அவரது முன்னாள் மனைவி ஆகக் கடைசியாகத் தொடர் கொண்டதாகவும் விசாரணையில் தெரிய வந்ததாக அர்ஷத் அபு குறிப்பிட்டார்.

உடற்கூறாய்வுக்காக அந்தச் சடலம் ஆலோர் காஜா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு