Mar 12, 2026
Thisaigal NewsYouTube
மலேசிய விமானத்திற்கு இடையூறு விளைவித்ததாக ஆஸ்ரேலிய பிரஜை மீது குற்றச்சாட்டு.
தற்போதைய செய்திகள்

மலேசிய விமானத்திற்கு இடையூறு விளைவித்ததாக ஆஸ்ரேலிய பிரஜை மீது குற்றச்சாட்டு.

Share:

ஆஸ்ரேலியா, சிட்னியிலிருந்து கோலாலம்பூரை நோக்கிப் புறப்பட்ட மலேசியா ஏர்லைன்சுக்கு சொந்தமான எம்எச் 122 விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக புரளியைக் கிளப்பிய ஆஸ்ரேலிய பிரஜை ஒருவர் இன்று சிட்னி நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார். 45 வயதுடைய அந்த ஆஸ்ரேலிய பிரஜை மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. ஒன்று விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக புரளியைக் கிளப்பி சக பயணிகளின் பாதுகாப்பிற்கு மிரட்டலை ஏற்படுத்தியது, இரண்டாவது விமான பணியாளர்களிடம் முரட்டுதனமாக நடந்துக் கொண்டது ஆகிய இரு குற்றச்சாட்டுகளை ஆஸ்ரேலிய பிரஜை எதிர் நோக்கி உள்ளார். நேற்று திங்கட்கிழமை சிட்னியில் இருந்து கோலாலம்பூரை நோக்கி பிற்பகல் 1.30 மணியளவில் புறப்பட்ட அந்த எம்எச்122 விமானம் ஆஸ்ரேலிய வான் போக்குவரத்து பாதையில் சென்று கொண்டிருந்த போது சம்பந்தப்பட்ட பயணி இத்தகைய அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கோலாலம்பூருக்குச் செல்வதற்கான பயணம் ரத்துசெய்யப்பட்டு மீண்டும் ஆஸ்ரேலியாவிற்கு விமானநிலையத்தில் தரையிறங்கியது. 45 வயதுடைய அந்த ஆஸ்ரேலிய பிரஜை கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளார். அந்த ஆஸ்ரேலிய பிரஜையில் இத்தகைய செயலினால் சிட்னி அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த 32 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஆஸ்ரேலியா வான் போக்குவரத்து இலாகா அறிவித்துள்ளது

Related News

நோன்புப் பெருநாளை முன்னிட்டு பிளஸ் நெடுஞ்சாலையில் 2.3 மிக்கியன் வாகனங்கள் பயணிக்க வாய்ப்பு

நோன்புப் பெருநாளை முன்னிட்டு பிளஸ் நெடுஞ்சாலையில் 2.3 மிக்கியன் வாகனங்கள் பயணிக்க வாய்ப்பு

ஊழலுக்கு எதிரான போராட்டம்: நேர்மை மற்றும் நற்பரிபாலனத்தைப் பண்பாடாக மாற்ற பிரதமர் வலியுறுத்தல்

ஊழலுக்கு எதிரான போராட்டம்: நேர்மை மற்றும் நற்பரிபாலனத்தைப் பண்பாடாக மாற்ற பிரதமர் வலியுறுத்தல்

சிகிச்சையில் இருக்கும் நடிகர் சத்யாவிற்கு 10 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி / துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி நேரில் சந்தித்து வழங்கினார்

சிகிச்சையில் இருக்கும் நடிகர் சத்யாவிற்கு 10 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி / துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி நேரில் சந்தித்து வழங்கினார்

முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்

முன்னாள் அம்னோ அரசியல் தலைவர் மெரினா யூசுப் காலமானார்

முன்னாள் அம்னோ அரசியல் தலைவர் மெரினா யூசுப் காலமானார்