வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 29.1 ஆவது கிலோ மீட்டரில் ஜோகூர், கூலாய் அருகில் காரும், லோரியும் மோதிக்கொண்ட விபத்தில் காரில் பயணித்த இருவரில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் கடும் காயங்களுக்கு ஆளானார்.
இன்று பிற்பகல் 2 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் காரின் பயணிகள் இருக்கையில் அமர்ந்திருந்த ஆடவர் சம்பவ இடத்திலேயே மாண்ட வேளையில் காரை செலுத்திய 31 வயது நபர், கூலாய் மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். காரின் இடிபாடுகளில் சிக்கிய நபரின் உடலை மீட்பதற்கு தீயணைப்பு, மீட்புப்படையினர் பிரத்தியேக சாதனங்களை பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டது.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


