வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 29.1 ஆவது கிலோ மீட்டரில் ஜோகூர், கூலாய் அருகில் காரும், லோரியும் மோதிக்கொண்ட விபத்தில் காரில் பயணித்த இருவரில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் கடும் காயங்களுக்கு ஆளானார்.
இன்று பிற்பகல் 2 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் காரின் பயணிகள் இருக்கையில் அமர்ந்திருந்த ஆடவர் சம்பவ இடத்திலேயே மாண்ட வேளையில் காரை செலுத்திய 31 வயது நபர், கூலாய் மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். காரின் இடிபாடுகளில் சிக்கிய நபரின் உடலை மீட்பதற்கு தீயணைப்பு, மீட்புப்படையினர் பிரத்தியேக சாதனங்களை பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டது.

Related News

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி


