கோலாலம்பூர், மார்ச்.02-
ரமலான் பண்டிகையை முன்னிட்டு, இரயில் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டதால், வரும் மார்ச் 17 முதல் 29 வரையில், 26 கூடுதல் ஈடிஎஸ் இரயில்களை இயக்கவிருப்பதாக மலாயன் இரயில்வே பெர்ஹாட்டான கேடிஎம் அறிவித்துள்ளது.
அதன் படி, இன்று மதியம் முதல் 10 கூடுதல் ஈடிஎஸ் இரயில்களுக்கான டிக்கெட்டுகள் விற்பனைக்கு வரும் நிலையில், எஞ்சிய 16 கூடுதல் ஈடிஎஸ் இரயில்களுக்கான விற்பனை பின்னர் அறிவிக்கப்படவுள்ளது.
இந்த கூடுதல் ஈடிஎஸ் ரயில் சேவைகளானது ஜேபி சென்ட்ரல் - கேஎல் செட்ரல்-க்கு இடையில் 8 பயணங்களும், ஈப்போ - கேஎல் சென்ட்ரல் இடையே 6 பயணங்களும், பட்டர்வொர்த் - கேஎல் சென்ட்ரல் மற்றும் பாடாங் பெசார் - கேஎல் சென்ட்ரல் இடையே இரண்டு பயணங்களும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.
EMUPlus சேவைகளைப் பொறுத்த வரை, அதே காலக் கட்டத்தில் ஈப்போ மற்றும் கேஎல் சென்ட்ரல் இடையே எட்டு பயணங்கள் இயங்கப்படவுள்ளதாக கேடிஎம் அறிவித்துள்ளது.








