Oct 26, 2025
Thisaigal NewsYouTube
கேசாஸ் நெடுஞ்சாலையில் கோர விபத்து: கட்டுப்பாட்டை இழந்த 15 வயதுச் சிறுவன் பலி, மோதிவிட்டுத் தப்பியோடிய இருவர்!
தற்போதைய செய்திகள்

கேசாஸ் நெடுஞ்சாலையில் கோர விபத்து: கட்டுப்பாட்டை இழந்த 15 வயதுச் சிறுவன் பலி, மோதிவிட்டுத் தப்பியோடிய இருவர்!

Share:

ஷா ஆலாம், அக்டோபர்.26-

கெசாஸ் விரைவுச் சாலையில், கிள்ளான் நோக்கிச் செல்லும் பாதையில், இன்று அதிகாலை 3.35 மணியளவில் நடந்த விபத்தில் கட்டுப்பாட்டை இழந்த 15 வயதுச் சிறுவன் ஒருவன் தான் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்து, பின்னால் வந்த மேலும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில், பரிதாபமாக உயிரிழந்தான்.

சம்பவ இடத்தில் உயிரிழந்த அந்தச் சிறுவன், விபத்துக்குள்ளான பின் சாலையின் நடுவில் வீசப்பட்டதாகவும், பின்னர் மோதிய அந்த இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும் அடையாளம் காணப்படாத நிலையில், உடனடியாகச் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிவிட்டதாகவும் நம்பப்படுவதாக கிள்ளான் செலாத்தான் மாவட்டக் காவற்படையின் துணைத் தலைவர் சுப்ரிண்டெண்டன் கமாலரிஃபின் அமான் ஷா தெரிவித்தார். தப்பியோடியவர்கள் விபத்து நடந்த போது பந்தயத்தில் ஈடுபட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதாகவும், விபத்தின் உண்மையான காரணத்தைக் கண்டறிய சாட்சிகள் அல்லது தொடர்புடையவர்கள் முன்வந்து உதவ வேண்டும் என்றும் காவற்படை கேட்டுக் கொண்டுள்ளது.

Related News

ஆபத்தான ஆன்லைன் வீடியோ கேம்கள்: வன்முறை உள்ளடக்கத்தால் குழந்தைகள் தீவிர முடிவுகளை எடுக்கும் அபாயம்!

ஆபத்தான ஆன்லைன் வீடியோ கேம்கள்: வன்முறை உள்ளடக்கத்தால் குழந்தைகள் தீவிர முடிவுகளை எடுக்கும் அபாயம்!

சட்டத்திற்குப் புறம்பான இணையச் சூதாட்டம்: டாமன்சாராவில் 7 மையங்களில் சோதனை, 147 பேர் கைது!

சட்டத்திற்குப் புறம்பான இணையச் சூதாட்டம்: டாமன்சாராவில் 7 மையங்களில் சோதனை, 147 பேர் கைது!

தெலுக் இந்தானில் பேரிழப்பு: 6 வீடுகள் எரிந்து நாசம்; ரிம18,000 பணம், நகைகள் எரிந்ததால் மக்கள் கண்ணீர்!

தெலுக் இந்தானில் பேரிழப்பு: 6 வீடுகள் எரிந்து நாசம்; ரிம18,000 பணம், நகைகள் எரிந்ததால் மக்கள் கண்ணீர்!

ஆசியான் மாநாடு: பாதையை மாற்றிய கார்; போக்குவரத்துக் காவற்படை அதிகாரி காயமடைந்தார்!

ஆசியான் மாநாடு: பாதையை மாற்றிய கார்; போக்குவரத்துக் காவற்படை அதிகாரி காயமடைந்தார்!

ஆசியான் மாநாடு: பாதுகாப்பு காரணங்களுக்காக சில Rapid KL நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன!

ஆசியான் மாநாடு: பாதுகாப்பு காரணங்களுக்காக சில Rapid KL நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன!

வெள்ளத்தின் பிடியில் இருந்து மீளும் கெடா: 10 நிவாரண மையங்கள் மூடப்பட்டு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைந்தது!

வெள்ளத்தின் பிடியில் இருந்து மீளும் கெடா: 10 நிவாரண மையங்கள் மூடப்பட்டு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைந்தது!