பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அமைச்சரவை மாற்றத்தில் இந்திய சமூகத்திற்கு போதுமான பிரதிநிதித்துவம் இல்லாததால், இந்திய சமுதாயத்தின் அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் வெளிப்படுத்துவற்கு தமிழ் சமுதாயத்தை சேர்ந்த மூன்று துணை அமைச்சர்களும் பதவி விலக வேண்டும் என்று பினாங்கு முன்னாள் துணை முதல்வர் டாக்டர் பி. .இராமசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
அமைச்சரவையில் தமிழ் சமுதாயத்தின் பிரதிநிதித்துவம் இல்லாமல் தமிழ்மொழியை அடிப்படையாக கொண்டு செயல்படும் தமிழ்ப்பள்ளிகளையும், கோயில்களையும், சமூகம் நலன் சார்ந்த பொருளாதார திட்டங்களையும் முன்னெடுக்க முடியாது.
இந்திய சமூகத்தை சேர்ந்த தமிழர்களை முழு அமைச்சராக பதவியில் அமர்த்துவதில் பிரதமர் அன்வாருக்கு விருப்பம் இல்லாத போது, இந்திய சமுதாயத்தின் நலன் சார்ந்த திட்டங்களுக்கு குரல் கொடுக்க மூன்று துணை அமைச்சர்களால் இயலாது.
சமுதாயத்தின் அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் உணர்ந்து மூன்று துணை அமைச்சர்களும் பதவி விலகுவதே அரசாங்கத்திற்கு நாம் தெரிவிக்கக்கூடிய செய்தியாகும் என்று டாக்டர் இராமசாமி குறிப்பிட்டுள்ளார்.








