Mar 14, 2026
Thisaigal NewsYouTube
மூன்று துணை அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்
தற்போதைய செய்திகள்

மூன்று துணை அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்

Share:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அமைச்சரவை மாற்றத்தில் இந்திய சமூகத்திற்கு போதுமான பிரதிநிதித்துவம் இல்லாததால், இந்திய சமுதாயத்தின் அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் வெளிப்படுத்துவற்கு தமிழ் சமுதாயத்தை சேர்ந்த மூன்று துணை அமைச்சர்களும் பதவி விலக வேண்டும் என்று பினாங்கு முன்னாள் துணை முதல்வர் டாக்டர் பி. .இராமசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

அமைச்சரவையில் தமிழ் சமுதாயத்தின் பிரதிநிதித்துவம் இல்லாமல் தமிழ்மொழியை அடிப்படையாக கொண்டு செயல்படும் தமிழ்ப்பள்ளிகளையும், கோயில்களையும், சமூகம் நலன் சார்ந்த பொருளாதார திட்டங்களையும் முன்னெடுக்க முடியாது.

இந்திய சமூகத்தை சேர்ந்த தமிழர்களை முழு அமைச்சராக பதவியில் அமர்த்துவதில் பிரதமர் அன்வாருக்கு விருப்பம் இல்லாத போது, இந்திய சமுதாயத்தின் நலன் சார்ந்த திட்டங்களுக்கு குரல் கொடுக்க மூன்று துணை அமைச்சர்களால் இயலாது.

சமுதாயத்தின் அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் உணர்ந்து மூன்று துணை அமைச்சர்களும் பதவி விலகுவதே அரசாங்கத்திற்கு நாம் தெரிவிக்கக்கூடிய செய்தியாகும் என்று டாக்டர் இராமசாமி குறிப்பிட்டுள்ளார்.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்