May 5, 2026
Thisaigal NewsYouTube
சாலையைக் கடந்த போது விபத்து: இல்லத்தரசி பரிதாப மரணம்
தற்போதைய செய்திகள்

சாலையைக் கடந்த போது விபத்து: இல்லத்தரசி பரிதாப மரணம்

Share:

அலோர் ஸ்டார், பிப்ரவரி.18-

அலோர் ஸ்டார், டாருல் அமான் நெடுஞ்சாலையில் இன்று காலை 7.30 மணியளவில் சாலையைக் கடந்த 68 வயது இல்லத்தரசி, கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சின் சியோ ஹுவா என்ற அந்தப் பெண்மணி, சாலையின் வலதுபுற தடத்தில் நேராகச் சென்று கொண்டிருந்த புரோட்டோன் சாகா கார் மோதியதில் உயிரிழந்ததை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்,

கோத்தா ஸ்டார் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சையிட் பஸ்ரி சையிட் அலி இது குறித்து கூறுகையில், 29 வயது இளைஞர் ஓட்டி வந்த கார், Mergong, தாமான் ஸ்ரீ கெமிலாங் பகுதியிலிருந்து ஜித்ரா நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்தப் பெண்மணி சாலையின் இடது புறத்திலிருந்து வலது புறத்திற்குச் சாலையைக் கடக்க முயன்றுள்ளார் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றார்.

சாலை நேராகவும் வானிலை சீராகவும் இருந்தது. ஆனால், தெருவிளக்குகள் எரியாததால் அந்த இடம் இருட்டாகக் காணப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்மணி வாகனத்திற்கு முன்னால் எதிர்பாராத விதமாக திடீரென சாலையைக் கடந்ததாகத் தெரிகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

Related News