Mar 30, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்பூரில் பல்வேறு பகுதிகளிர் திடீர் வெள்ளம்
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூரில் பல்வேறு பகுதிகளிர் திடீர் வெள்ளம்

Share:

கோலாலம்பூர், நவ. 15-


கோலாலம்பூரில் இன்று மாலையில் பெய்த கனத்த மழையில் பல்வேறு பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டு மக்களை சிரமத்தில் ஆழ்த்தியது.

மாநகரின் பிரதான சாலைகளான ஜாலான் புடு, ஜாலான் சுல்தான் மற்றும் பெட்டாலிங் ஸ்திரீட் முதலிய பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

பல சாலைகளில் நீரின் மட்டம் முழுங்கால் வரை உயர்ந்திருந்தது. இதனால், வாகனமோட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். வெள்ளத்தின் மத்தியில் வானங்கள் சிக்கிக்கொண்டது தொடர்பில் தீயணைப்பு, மீட்புப்படையினரும் அதிகமான அவசர அழைப்புகளை பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News