பினாங்கு மாநில அரசாங்கம், நிலம் மற்றும் மனை உரிமையாளர்களுக்கு காலதாமதமான அபராதத் தொகையை ஒருமுறை மட்டுமே மொத்தமாக செலுத்தி கொள்வதற்கு 50 விழுக்காடு கழிவு கட்டணம் வழங்குகிறது.
2023 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி நடைபெற்ற மாநில அரசாங்கக் கூட்டத்தில் இந்த தள்ளுபடி அங்கீகரிக்கப்பட்டதுடன் இவ்வாண்டு மே 31 ஆம் தேதி வரை இத்திட்டம் நடைமுறையில் செயல்படுத்தப்படும் என்று பினாங்கு முதலமைச்சர் சொவ் கொன் யொ தெரிவித்தார்.
நிலம், மனை உரிமையாளர்கள் தங்களின் வரிகளை உடனுக்குடன் செலுத்த ஊக்குவிக்கும் வகையில் இந்த முயற்சி எடுக்கப்பட்டதாக சொவ் கூறினார்.
நிலம் மற்றும் மாவட்ட அலுவலக கவுண்டர், PgLAND இணையத்தளத்தின் மூலம் நிலவரியை செலுத்துபவர்களுக்கு இத்தள்ளுப்படி தானாகவே கிடைக்கபெறும் என்று Chow விவரித்தார்.








