ஷா ஆலாம், ஜூலை.01-
சிலாங்கூர், ஜாலான் பந்திங், தெலுக் பங்ளிமா காராங்கில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஐந்து கார்கள் தீயில் அழிந்தன.
இந்தச் சம்பவம் இன்று காலை 6.30 மணியளவில் தெலுக் பங்ளிமா காராங்கில் நிகழ்ந்தது என்று சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப் படையின் உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
இது தொடர்பாக தீயணைப்புப் படையினர் காலை 6.44 மணியளவில் ஓர் அவசர அழைப்பைப் பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.








