Dec 2, 2025
Thisaigal NewsYouTube
பேருந்தில் மோதி 17 வயது இளைஞர் பலி – விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக Rapid Penang அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

பேருந்தில் மோதி 17 வயது இளைஞர் பலி – விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக Rapid Penang அறிவிப்பு

Share:

ஜார்ஜ்டவுன், நவம்பர்.15-

பினாங்கு Tun Dr Lim Chong Eu Expressway சாலையில், கடந்த வியாழக்கிழமை பேருந்துடன், மோட்டார் சைக்கிள் மோதி, 17 வயது இளைஞர் பலியான சம்பவத்தில், போலீஸ் விசாரணைக்கு, முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாக Rapid Penang நிறுவனம் தெரிவித்துள்ளது.

காலை 11 மணியளவில் நடந்த இச்சம்பவத்தின் போது, தடம் 303-ல் செல்லும் பேருந்தின் வலது பக்கவாட்டில் மோதிய அந்த இளைஞர், பேருந்தில் சிக்கி பலியானார்.

இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருவதாகவும், சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகள் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் Rapid Penang தெரிவித்துள்ளது.

விசாரணை முடிவுகளுக்காகத் தாங்கள் காத்திருக்கும் அதே வேளையில், நியாயமான முறையில் இவ்விசாரணை நடைபெற, அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் Rapid Penang வலியுறுத்தியுள்ளது.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்