Mar 17, 2026
Thisaigal NewsYouTube
பேருந்தில் மோதி 17 வயது இளைஞர் பலி – விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக Rapid Penang அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

பேருந்தில் மோதி 17 வயது இளைஞர் பலி – விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக Rapid Penang அறிவிப்பு

Share:

ஜார்ஜ்டவுன், நவம்பர்.15-

பினாங்கு Tun Dr Lim Chong Eu Expressway சாலையில், கடந்த வியாழக்கிழமை பேருந்துடன், மோட்டார் சைக்கிள் மோதி, 17 வயது இளைஞர் பலியான சம்பவத்தில், போலீஸ் விசாரணைக்கு, முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாக Rapid Penang நிறுவனம் தெரிவித்துள்ளது.

காலை 11 மணியளவில் நடந்த இச்சம்பவத்தின் போது, தடம் 303-ல் செல்லும் பேருந்தின் வலது பக்கவாட்டில் மோதிய அந்த இளைஞர், பேருந்தில் சிக்கி பலியானார்.

இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருவதாகவும், சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகள் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் Rapid Penang தெரிவித்துள்ளது.

விசாரணை முடிவுகளுக்காகத் தாங்கள் காத்திருக்கும் அதே வேளையில், நியாயமான முறையில் இவ்விசாரணை நடைபெற, அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் Rapid Penang வலியுறுத்தியுள்ளது.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு