Mar 18, 2026
Thisaigal NewsYouTube
மின்சுடலை பணியாளர் கடும் காயங்களுக்கு ஆளானார்
தற்போதைய செய்திகள்

மின்சுடலை பணியாளர் கடும் காயங்களுக்கு ஆளானார்

Share:

ஜோர்ஜ் டவுன், மார்ச் 2 -

பிரேதத்தை தகனம் செய்யும் இடத்தில், மின் சுடலை பணியாளருடன் தகராற்றில் ஈடுபட்டதாக நம்பப்படும் இறந்தவரின் குடும்ப உறுப்பினர், மரக்கட்டையைக் கொண்டு தலையில் தாக்கியதில் அந்த மின்சுடலைப் பணியாளர் கடும் காயங்களுக்கு ஆளானார்.

இச்சம்பவம் நேற்று மதியம் 12 மணியளவில் பினாங்கு, ஜார்ஜடவுன், பாது குந்துங் மின்சுடலை வளாகத்தில் நிகழ்ந்தது. இச்சம்பவத்தில் கடும் காயங்களுக்கு ஆளாகி மயங்கி விழுந்த 45 வயது மின்சுடலை பணியாளர் பின்னர், சக பணியாளரின் உதவியுடன் பினாங்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்த தனது தாயாரின் ஆஸ்தியை எடுக்கும் விவகாரத்தில் தங்கள் குடும்பத்தினரின் வேண்டுகோளை பின்பற்றவில்லை என்று கூறி, இறந்தவரின் குடும்ப உறுப்பினர் ஒருவர், அந்த மின்சுடலைப் பணியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் 40 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு ஏதுவாக நான்கு நாள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக Timur Laut மாவட்ட போலீஸ் தலைவர் ராஸ்லாம் அப்துல் ஹாமிட் தெரிவித்தார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு