May 18, 2026
Thisaigal NewsYouTube
வெடிகுண்டு கண்டுபிடிப்பு: மெனோரா சுரங்கப்பாதை வழித்தடம் மூடப்பட்டது
தற்போதைய செய்திகள்

வெடிகுண்டு கண்டுபிடிப்பு: மெனோரா சுரங்கப்பாதை வழித்தடம் மூடப்பட்டது

Share:

கோலாலம்பூர், ஜூன்.30-

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 265 ஆவது கிலோமீட்டரில் மெனோரா சுரங்கப்பாதைக்கு அருகில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த வெடிகுண்டை அகற்றுவதற்கு ஏதுவாக அதன் வழித்தடம் சிறிது நேரம் மூடப்பட்டது.

வெடிகுண்டை அகற்றுவதற்கு போலீசாருக்கு சுமார் ஒரு மணி நேரம் தேவைப்பட்டதாக பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ நோர் ஹிசாம் நோர்டின் தெரிவித்தார்.

இன்று காலையில் அப்பகுதியில் பராமரிப்புப் பணியை மேற்கொண்ட குத்தகைப் பணியாளர் ஒருவர், அந்த பழங்கால வெடிகுண்டைக் கண்டுபிடித்ததாக அவர் குறிப்பிட்டார்.

செடி, கொடிகள் மற்றும் புற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த 51 வயது பணியாளர், அந்த வெடிகுண்டு குறித்து தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து வெடிகுண்டு செயலிழப்பு போலீஸ் குழு அவ்விடத்திற்கு அனுப்பப்பட்டதாக டத்தோ நோர் ஹிசாம் குறிப்பிட்டார்.

பிளஸ் நிறுவனத்தின் உதவியுடன் கோலகங்சாருக்கும், ஈப்போவிற்கும் இடையிலான வழித்தடம் தற்காலிகமாக மூடப்பட்டு, வெடிகுண்டு செயலிழக்க செய்த பின்னர் பிற்பகல் 3 மணிக்கு அந்த வழித்தடம் மீண்டும் திறக்கப்பட்டதாக அவர் விளக்கினார்.

Related News

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி