May 26, 2026
Thisaigal NewsYouTube
கிள்ளானில் அதிரடி சோதனையை நடத்தியது
தற்போதைய செய்திகள்

கிள்ளானில் அதிரடி சோதனையை நடத்தியது

Share:

டிச.6-

நேற்று மலேசிய உள்நாட்டு வணிகம், வாழ்க்கைச் செலவின அமைச்சு ஒரே நேரத்தில், கிள்ளானில் ஒரு வணிக மையத்திலும் செரெண்டாவில் உள்ள ஒரு வீட்டிலும் அதிரடி சோதனையை நடத்தியது. அங்கு போலியான பொருட்களை விற்பனை செய்யப்படுவதாகக் கிடைக்கப்பெற்றத் தகவலின் அடிப்படையில் KITA GEMPUR எனும் சோதனை நடவடடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

செரெண்டாவில் உள்ள ஒரு வீட்டில் நடத்தப்பட்டச் சோதனையில், போலியான வர்த்தக முத்திரை கொண்ட 500க்கும் மேற்பட்ட பெண்கள் அணியும் கைப்பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை TIKTOK மூலம் விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்பட்டது. இதன் மதிப்பு 17 ஆயிரம் ரிங்கிட்டை எட்டுவதாக Mohd Zuhairi தமதறிக்கையில் குறிப்பிட்டார்.

கிள்ளானில் நடத்தப்பட்டச் சோதனையின்போது, பெண்கள் அணியும் ஆபரணங்கள், கைப்பைகள் போன்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் போலியான வர்த்தக முத்திரைகளைப் பயன்படுத்தியிருந்தன. 6 ஆயிரத்து 59 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மதிப்பு சுமார் 20 ஆயிரம் ரிங்கிட்டாகும் என உள்நாட்டு வணிகம், வாழ்க்கைச் செலவின அமைச்சின் சிலாங்கூர் மாநில இயக்குநர் Mohd Zuhairi வெளியிட்ட அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்தார்.

போலிப் பொருட்களை விற்பனை செய்வது வணீக முத்திரை சட்டம் 2019இன்படி குற்றமாகும். இதற்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும். போலிப் பொருட்கள் விற்பனைக்கு எதிரான நடவடிக்கையை அமைச்சு தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் பொதுமக்கள் போலிப் பொருட்கள் குறித்து அமைச்சிற்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும் Mohd Zuhairi கூறினார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு