Dec 3, 2025
Thisaigal NewsYouTube
பத்து  ஃபெரிங்கி காட்டில் மலையேற்றம் : இரண்டு மலையேறிகள் காணாமல் போனதாகத் தகவல்
தற்போதைய செய்திகள்

பத்து ஃபெரிங்கி காட்டில் மலையேற்றம் : இரண்டு மலையேறிகள் காணாமல் போனதாகத் தகவல்

Share:

ஜார்ஜ்டவுன், செப்டம்பர்.26-

பினாங்கு, பத்து ஃபெரிங்கியில் உள்ள ஃபிரிடம் ஹீல் மலைப்பகுதியின் அருகில் உள்ள ஹப்பி ரோக் காட்டுப் பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த ஓர் ஆணும் ஒரு பெண்ணும் காணவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த இருவரும் வழிதவறிச் சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் ஜோன் சகூன் பிரான்சிஸ் கூறுகையில், இந்தச் சம்பவம் குறித்து இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.38 மணிக்குத் தாங்கள் அவசர அழைப்பைப் பெற்றதாகவும், பாகான் ஜெர்மால் தீயணைப்பு, மீட்பு நிலையத்திலிருந்து ஆறு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்தார்.

முதற்கட்ட பணியாக, மலையேறிகளான அந்த ஆணும்,பெண்ணும் வாட்ஸ்அப் மூலம் பகிர்ந்து கொண்ட இடத்தை அடிப்படையாகக் கொண்டு தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மாலை 5 மணி நிலவரப்படி, காட்டில் வழிதவறிச் சென்றதாகக் கருதப்படும் அந்த இருவரையும் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு இருப்பதாகத்ப் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று ஜோன் சகூன் பிரான்சிஸ் குறிப்பிட்டார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்