நான்கு வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததுடன் அவரின் மனைவி கடும் காயங்களுக்கு ஆளானார். இச்சம்பவம் நேற்று மாலை 5 மணியளவில் பேரா, லெங்கோங், மாரா அறிவியல் கல்லூரியின் முன்புறம் பிரதான சாலையில் நிகழ்ந்தது. புரோடுவா மைவி காரில் பயணித்த 65 வயது ஷஹாருதீன் ஒஸ்மான் என்பவர் உயிரிழந்ததாக அடையாளம் கூறப்பட்டுள்ள வேளையில் அவரின் 53 வயது மனைவி கடும் காயங்களுக்கு ஆளானதாக லெங்கோங் தீயணைப்பு, மீட்புப்படை நிலைய தலைவர் அனுர் ரசாலி தெரிவித்தார்.
இவ்விபத்தில் புரோடுவா அருஸ், தொயோத்தா அவான்சா மற்றம் ஒரு கொள்கலன் லோரி என மேலும் மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்டு இருந்ததாக அவர் குறிப்பிட்டார். காரின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக்கொண்ட அந்த முதியவரின் உடலை மீட்பதற்கு தீயணைப்பு, மீட்புப்படையினர் பிரத்தியேக சாதனங்களை பயன்படுத்தியதாக அனுவார் ரசாலி மேலும் விவரித்தார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


