Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

கெடா, கத்தும்பா தமிழ்ப்பள்ளி மூடப்படாது - கல்வி அமைச்சர் ஃபட்லீனா சீடேக் உத்தரவாதம்

Share:

பாலிங், பிப்.24-

நிரந்தர இடமின்றி, தற்போது கோலக்கெட்டில் பிஞ்ஜோல் தமிழ்ப்பள்ளிக்கு தற்காலிகமாக இடம் மாற்றப்பட்டுள்ள கெடா, பாலிங் மாவட்டத்தில் உள்ள கத்தும்பா தமிழ்ப்பள்ளி மூடப்படாது என்று கல்வி அமைச்சர் ஃபட்லீனா சீடேக் இன்று உத்தரவாதம் அளித்துள்ளார்.

சைம் டார்பிக்கு சொந்தமான கத்தும்பா தோட்டம் மூடப்பட்டதைத் தொடர்ந்து அப்பள்ளி மற்றொரு பள்ளிக்கு தற்காலிமாக இடம் மாற்றப்பட்டது.

மடானி அரசாங்கத்தின் கீழ் கத்தும்பா தமிழ்ப்பள்ளி உட்பட எந்தவொரு தமிழ்ப்பள்ளியும் மூடப்படாது என்று இன்று நாடாளுமன்றத்தில் ஃபட்லீனா சீடேக் தெளிவுபடுத்தினார்.

நிரந்தர இடமின்றி அலைகழிக்கப்படும் கத்தும்பா தமிழ்ப்பள்ளி தொடர்பாக ஜெலுத்தோங் எம்.பி. RSN ராயர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் ஃபட்லீனா சீடேக் இவ்வாறு தெரிவித்தார்.

அதேவேளையில் மடானி அரசாங்கத்தின் கீழ் இந்நாட்டில் உள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகளும் பாதுகாக்கப்படும் என்று இந்திய சமுதாயத்தின் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்துவதில் கல்வி அமைச்சுக்கு உதவுமாறு ராயரை ஃபட்லீனா சீடேக் கேட்டுக்கொண்டார்.

Related News

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி  நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு