Mar 24, 2026
Thisaigal NewsYouTube
பேருந்து ஓட்டுநருக்கு 7 நாள் சிறை, அபராதம்
தற்போதைய செய்திகள்

பேருந்து ஓட்டுநருக்கு 7 நாள் சிறை, அபராதம்

Share:

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட்.05-

கடந்த சனிக்கிழமை செர்டாங், புத்ரா மலேசியா பல்கலைக்கழகம் அருகில் பேருந்து ஒன்று சாலையை விட்டு விலகி, மரத்தில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் பேருந்து ஓட்டுநருக்கு பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 7 நாள் சிறைத் தண்டனை விதித்தது. அத்துடன் 8 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்க உத்தரவிட்டது.

இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 30 பாலர் பள்ளி மாணவர்கள் மற்றும் 5 ஆசிரியர்களில் மூன்று பிள்ளைகளும், ஒரு ஆசிரியரும் காயமுற்றனர்.

கவனக்குறைவாகச் செயல்பட்ட குற்றத்திற்காக 1987 ஆம் ஆண்டு போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட 44 வயது ஹமீர் மஸ்ருடின் என்ற அந்த பேருந்து ஓட்டுநர், தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

Related News