May 6, 2026
Thisaigal NewsYouTube
சிகரெட் துண்டை வீசிய இந்தோனேசியருக்கு 300 ரிங்கிட் அபராதம் மற்றும் 6 மணி நேரச் சமூகச் சேவை
தற்போதைய செய்திகள்

சிகரெட் துண்டை வீசிய இந்தோனேசியருக்கு 300 ரிங்கிட் அபராதம் மற்றும் 6 மணி நேரச் சமூகச் சேவை

Share:

அலோர் ஸ்டார், ஜனவரி.26-

பொது இடத்தில் குப்பை கொட்டியதற்காகக் கெடா மாநிலத்தில் அபராதம் விதிக்கப்பட்டு, சமூக சேவை செய்ய உத்தரவிடப்பட்ட முதல் நபர் என்ற நிலையை இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒருவர் பெற்றுள்ளார்.

39 வயதான கட்டுமானத் தொழிலாளி ஜுஃப்ரி ஸுல்கிஃப்லி, கடந்த ஜனவரி 1-ஆம் தேதி நள்ளிரவு 12.10 மணியளவில், அலோர் ஸ்டார் மெனாரா அலோர் ஸ்டார் கோபுரத்தின் பொது இடத்தில் சிகரெட் துண்டைக் குப்பைத் தொட்டியில் போடாமல் சாக்கடையில் வீசியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டார்.

அலோர் ஸ்டார் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி என். பிரிசில்லா ஹேமாமாலினி முன்னிலையில் நிறுத்தப்பட்ட ஜுஃப்ரி ஸுல்கிஃப்லி, தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். அவருக்கு 300 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தைக் கட்டத் தவறினால் 3 மாத சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அபராதத்துடன் கூடுதலாக, அவருக்கு 6 மணி நேர சமூகச் சேவை செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அடுத்த இரண்டு மாத காலத்திற்குள், ஒரு நாளைக்கு அதிகபட்சம் ஒரு மணிநேரம் என்ற கணக்கில் இந்தச் சேவையை அவர் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னதாக தனது கருணை மனுவில் தனக்கு ஒரு நாளைக்கு 80 ரிங்கிட் மட்டுமே வருமானம் கிடைப்பதாகவும், மூன்று குழந்தைகளைத் தான் கவனித்து வருவதால் தண்டனையைக் குறைக்குமாறும் ஜுஃப்ரி நீதிமன்றத்தில் மன்றாடினார்.

Related News

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்