Jan 26, 2026
Thisaigal NewsYouTube
சிகரெட் துண்டை வீசிய இந்தோனேசியருக்கு 300 ரிங்கிட் அபராதம் மற்றும் 6 மணி நேரச் சமூகச் சேவை
தற்போதைய செய்திகள்

சிகரெட் துண்டை வீசிய இந்தோனேசியருக்கு 300 ரிங்கிட் அபராதம் மற்றும் 6 மணி நேரச் சமூகச் சேவை

Share:

அலோர் ஸ்டார், ஜனவரி.26-

பொது இடத்தில் குப்பை கொட்டியதற்காகக் கெடா மாநிலத்தில் அபராதம் விதிக்கப்பட்டு, சமூக சேவை செய்ய உத்தரவிடப்பட்ட முதல் நபர் என்ற நிலையை இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒருவர் பெற்றுள்ளார்.

39 வயதான கட்டுமானத் தொழிலாளி ஜுஃப்ரி ஸுல்கிஃப்லி, கடந்த ஜனவரி 1-ஆம் தேதி நள்ளிரவு 12.10 மணியளவில், அலோர் ஸ்டார் மெனாரா அலோர் ஸ்டார் கோபுரத்தின் பொது இடத்தில் சிகரெட் துண்டைக் குப்பைத் தொட்டியில் போடாமல் சாக்கடையில் வீசியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டார்.

அலோர் ஸ்டார் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி என். பிரிசில்லா ஹேமாமாலினி முன்னிலையில் நிறுத்தப்பட்ட ஜுஃப்ரி ஸுல்கிஃப்லி, தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். அவருக்கு 300 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தைக் கட்டத் தவறினால் 3 மாத சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அபராதத்துடன் கூடுதலாக, அவருக்கு 6 மணி நேர சமூகச் சேவை செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அடுத்த இரண்டு மாத காலத்திற்குள், ஒரு நாளைக்கு அதிகபட்சம் ஒரு மணிநேரம் என்ற கணக்கில் இந்தச் சேவையை அவர் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னதாக தனது கருணை மனுவில் தனக்கு ஒரு நாளைக்கு 80 ரிங்கிட் மட்டுமே வருமானம் கிடைப்பதாகவும், மூன்று குழந்தைகளைத் தான் கவனித்து வருவதால் தண்டனையைக் குறைக்குமாறும் ஜுஃப்ரி நீதிமன்றத்தில் மன்றாடினார்.

Related News

நில ஆக்கிரமிப்பு உள்ளது, ஆனால் 'சட்டவிரோதக் கோயில்' என முத்திரை குத்த வேண்டாம்

நில ஆக்கிரமிப்பு உள்ளது, ஆனால் 'சட்டவிரோதக் கோயில்' என முத்திரை குத்த வேண்டாம்

கடற்படை உயர் அதிகாரி மீதான ஊழல் விசாரணை: 21 வங்கிக் கணக்குகள், விடுதிகள் முடக்கம்

கடற்படை உயர் அதிகாரி மீதான ஊழல் விசாரணை: 21 வங்கிக் கணக்குகள், விடுதிகள் முடக்கம்

நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை காலத்தை 6 நிமிடங்களாகக் குறைக்கிறது வானிலை ஆய்வு மையம்

நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை காலத்தை 6 நிமிடங்களாகக் குறைக்கிறது வானிலை ஆய்வு மையம்

சிலாங்கூர் அரசு புக்கிட் தகார் பன்றி பண்ணைத் திட்டத்தை ரத்து செய்தது

சிலாங்கூர் அரசு புக்கிட் தகார் பன்றி பண்ணைத் திட்டத்தை ரத்து செய்தது

மலாக்காவில் களைகட்டும் சீனப் புத்தாண்டு: பாபா நியோன்யா உணவுகளுக்குக் குவியும் மவுசு

மலாக்காவில் களைகட்டும் சீனப் புத்தாண்டு: பாபா நியோன்யா உணவுகளுக்குக் குவியும் மவுசு

சட்டவிரோத நடவடிக்கையின் மூலம் 5  ஆயிரம் ரிங்கிட்  பெற்றதாக முன்னாள் ராணுவத் தளபதியின் மனைவி மீது குற்றம் சாட்டப்பட்டது

சட்டவிரோத நடவடிக்கையின் மூலம் 5 ஆயிரம் ரிங்கிட் பெற்றதாக முன்னாள் ராணுவத் தளபதியின் மனைவி மீது குற்றம் சாட்டப்பட்டது