May 24, 2026
Thisaigal NewsYouTube
சித்தி சஹாரா மறைவிற்கு பிரதமர் இரங்கல்
தற்போதைய செய்திகள்

சித்தி சஹாரா மறைவிற்கு பிரதமர் இரங்கல்

Share:

கோலாலம்பூர்,ஜூலை 27-

முன்னாள் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சரும், அம்னோவின் முன்னாள் மகளிர் பிரிவுத் தலைவியுமான Tan Sri Dr Siti Zahara-வின் மறைவிற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டார்.

தாம் அம்னோவில் இணைந்து இருந்த போது தமக்கு நெருக்கமான தோழியாக சித்தி சஹாரா விளங்கியதை பிரதமர் நினைவுகூர்ந்தார்.

சித்தி சஹாரா, தாம் கொண்டிருந்த போராட்டத்தில் திறமையான, அர்ப்பணிப்பு மற்றும் உறுதியான தலைராக விளங்கினார் என்று பிரதமர் வர்ணித்தார்.

ஒரு பொறுப்புமிகுந்த குடும்பத் தலைவியை இழந்துள்ள அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்வதாக டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

75 வயது முன்னாள் அமைச்சர் சித்தி சஹாரா, நேற்று இரவு செர்டாங் மருத்துவமனையில் காலாமானார்.

Related News