மண் லோரி உட்பட மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் மாது ஒருவர் உயிரிழந்ததுடன் அறுவர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் இன்று கலை 7.30 மணியளவில் ஜாலான் ஜொகூர் பாரு - ஆயேர் ஹீதாம் சாலையின் 77 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது.
இதில் தனது பிள்ளையை பள்ளிக்கு கொண்டு சென்று கொண்டிருந்த பெரோடுவா அக்ஸியா காரோட்டியான 40 வயது மாது, கடுமையான காயங்களுக்கு ஆளாகி சம்பவ நிகழ்ந்த இடத்திலேயே மாண்டார்.
அந்த காரை மோதுவதற்கு முன்னதாக மண் லோரியுடன் மோதிய மற்றொரு பெரோடுவா அக்ஸியா காரோட்டி உட்பட அறுவர் காயம் அடைந்ததாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் எசிபி பஹ்ரின் முகமட் தெரிவித்தார்.

Related News

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை


