மலேசியாவின் தேசிய வங்கியான பாங்க் நெகாரா அலுவலகத்தில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் அவசர மின்சார ஜெனரேட்டர் அறை சேதமடைந்தது.
காலை 7.32 மணியளவில் அவசர அழைப்பு கிடைத்ததாக கோலாலம்பூர் மாநகர தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு காலை 7.46 மணிக்குள் தீயை முழுமையாக அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் ஜெனரேட்டர் அறையின் சுமார் 40 விழுக்காடு பகுதி சேதமடைந்துள்ளதாகவும், விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பதையும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.








