Jan 23, 2026
Thisaigal NewsYouTube
கோலகுபு பாருவில் சேவையை தொடர்கிறார் டாக்டர் சிவா
தற்போதைய செய்திகள்

கோலகுபு பாருவில் சேவையை தொடர்கிறார் டாக்டர் சிவா

Share:

நடந்து முடிந்த சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் கோலகுபு பாரு தொகுதியில் மூடா கட்சி சார்பில் போட்டியிட்ட டாக்டர் ரா. சிவபிரகாஷ், வெற்றி வாய்ப்பை இழந்த போதிலும் தொடர்ந்து அத்தொகுதி மக்களுக்கு இயன்ற வரையில் சேவையாற்றுவதற்கு உறுதி பூண்டுள்ளார்.

கோலகுபு பாரு தொகுதியில் தமது தொடர் சேவையின் அடையாளமாக கம்போங் அசாம் கும்பாங் பகுதியில் உள்ள அனைத்து நிலைகளையும் சேர்ந்த மக்களுக்கு தற்போது உதவித்தொகைக்குரிய 3 வெள்ளிக்கு காலை பசியாறையை டாக்டர் சிவபிரகாஷ் வழங்கி வருகிறார்.

தனிப்பட்ட முயற்சியில் டாக்டர் சிவபிராகாஷ் வழங்கும் இந்த அனுகூலம், வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் முதல் 50 பேருக்கு என்று வரையறுக்கப்பட்ட நிலையில் இந்த 3 வெள்ளிக்குரிய காலை பசியாறையை வழங்கவிருக்கிறார்.

இந்த உதவியானது, மேற்கண்ட பகுதியில் B40 தரப்பைச் சேர்ந்த மக்களின் சுமையை சற்று குறைக்கும் என்று டாக்டசிவபிரகாஷ் நம்புகிறார்.

தவிர வாழ்வாதாரம் நன்றாக இருந்தால் இதனை உலு சிலாங்கூரில் உள்ள பல இடங்களில் கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று டாக்டர் சிவபிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர்  நியமனம்

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக  பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள்  நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு