Jul 16, 2026
Thisaigal NewsYouTube
விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்
தற்போதைய செய்திகள்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

Share:

ஹஜ்ஜூ பெருநாள் மற்றும் பள்ளி விடுமுறையை முன்னிட்டு, கடந்த மே 27 முதல் ஜூன் 4 -ஆம் தேதி வரை, சுமார் 3 லட்சம் மலேசியர்கள் தென் தாய்லாந்துக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஹாட் யாய் - சோங்க்லா ஹோட்டல்கள் சங்கத் தலைவர் சிட்டிபாங் சித்திபதராபிரபா வெளியிட்டுள்ள தகவலில், மலேசிய சுற்றுலாப் பயணிகள் நாராதிவாத், யாலா, சோங்க்லா மற்றும் சாத்தூன் ஆகிய பகுதிகளில் உள்ள ஒன்பது எல்லைகளின் வழியாகத் தாய்லாந்திற்கு வருகை புரிந்ததாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தக் காலகட்டத்தில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான ஹோட்டல் அறைகள் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டதுடன், தாய்லாந்தின் சுற்றுலாத்துறைக்கு 1 பில்லியன் பாட், மலேசிய மதிப்பில் 123.2 மில்லியன் ரிங்கிட் வருவாய் கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், எல்லைச் சாவடிகளில் 3 முதல் 4 மணி நேர காத்திருப்புகளுக்கு மக்கள் உள்ளானதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்நிலையில், தென் தாய்லாந்தானது,மலேசியர்களின் விருப்பமான சுற்றுலாத் தலமாக நீடிக்க வேண்டுமெனில், குடிநுழைவுச் சோதனை தாமதங்களை விரைவாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Related News

ஈப்போவில் இணைய மோசடிக் கும்பல் சிக்கியது: 18 சீனப் பிரஜைகள் கைது

ஈப்போவில் இணைய மோசடிக் கும்பல் சிக்கியது: 18 சீனப் பிரஜைகள் கைது

10.879 பில்லியன் ரிங்கிட் சமையல் எண்ணெய் மானியம் தகுதியானவர்களைச் சென்றடையவில்லை

10.879 பில்லியன் ரிங்கிட் சமையல் எண்ணெய் மானியம் தகுதியானவர்களைச் சென்றடையவில்லை

14 வயது சிறார்களிடமும் வகை-2 நீரிழிவு நோய் கண்டறியப்படுகிறது – சுகாதார அமைச்சர் எச்சரிக்கை

14 வயது சிறார்களிடமும் வகை-2 நீரிழிவு நோய் கண்டறியப்படுகிறது – சுகாதார அமைச்சர் எச்சரிக்கை

சபாவில் கிறிஸ்தவ வழிப்பாட்டுத் தலத்தை சேதப்படுத்திய 5 மாணவர்கள் கைது

சபாவில் கிறிஸ்தவ வழிப்பாட்டுத் தலத்தை சேதப்படுத்திய 5 மாணவர்கள் கைது

மலேசிய இந்தியர்களின் ஆவணப் பிரச்னைகளுக்குத் தீர்வு: உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின் புள்ளிவிவரங்களுடன் விளக்கம்

மலேசிய இந்தியர்களின் ஆவணப் பிரச்னைகளுக்குத் தீர்வு: உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின் புள்ளிவிவரங்களுடன் விளக்கம்

நெட்வொர்க் பள்ளி விவகாரம்: இஸ்ரேலியர்கள் இருப்பது உறுதியானால் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள்

நெட்வொர்க் பள்ளி விவகாரம்: இஸ்ரேலியர்கள் இருப்பது உறுதியானால் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள்