Jun 24, 2026
Thisaigal NewsYouTube
மதுபோதை ஓட்டுநரின் காரால் மோதப்பட்டு தம்பதியர் உயிரிழப்பு
தற்போதைய செய்திகள்

மதுபோதை ஓட்டுநரின் காரால் மோதப்பட்டு தம்பதியர் உயிரிழப்பு

Share:

கோலாலம்பூர், மே.03-

மதுபோதையால் மீண்டுமொரு கோர விபத்து! நேற்று அதிகாலை 5.34 மணியளவில் ஜாலான் அம்பாங் பகுதியில் மதுபோதையில் காரோட்டிய 24 வயது இளைஞர் ஒருவரின் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில், மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதியர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் 61 வயதுடைய கணவரும் 56 வயதுடைய மனைவியும் பலத்த காயமடைந்து உயிரிழந்த நிலையில், காரை ஓட்டிச் சென்ற இளைஞரும் அவருடன் இருந்த இரு நண்பர்களும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் சாலைப் போக்குவரத்து புலனாய்வு, அமலாக்கத் துறையின் தலைவர் உதவி ஆணையர் முகமட் ஸம்ஸுரி முகமட் இசா தெரிவித்தார்.

ஓட்டுநரின் இரத்தம், சிறுநீர் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதோடு, இந்த விபத்து குறித்து சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987-இன் கீழ் காவற்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

சபா தீவிபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாமன்னர் சார்பில் 5 லட்சம் நிதியுதவி

சபா தீவிபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாமன்னர் சார்பில் 5 லட்சம் நிதியுதவி

கூலிமில் பேருந்து விபத்து: ஓட்டுநர் காயம், 32 மாணவர்கள் உயிர் தப்பினர்

கூலிமில் பேருந்து விபத்து: ஓட்டுநர் காயம், 32 மாணவர்கள் உயிர் தப்பினர்

2030-க்குள் மலேசியாவில் ஏர் டாக்ஸி சேவை - புதிய திட்டப் பாதையை அறிமுகப்படுத்தியது போக்குவரத்து அமைச்சு

2030-க்குள் மலேசியாவில் ஏர் டாக்ஸி சேவை - புதிய திட்டப் பாதையை அறிமுகப்படுத்தியது போக்குவரத்து அமைச்சு

11.6 மில்லியன் ரிங்கிட் திட்ட ஊழல் வழக்கு / குவான் எங்கும், பெண் தொழிலதிபரும் விசாரணையை எதிர்கொள்ள வேண்டுமென நீதிமன்றம் தீர்ப்பு

11.6 மில்லியன் ரிங்கிட் திட்ட ஊழல் வழக்கு / குவான் எங்கும், பெண் தொழிலதிபரும் விசாரணையை எதிர்கொள்ள வேண்டுமென நீதிமன்றம் தீர்ப்பு

சிகாமட்டில் நடைபெறும் 'ஜோம்! மக்கான் டுரியான்' நிகழ்ச்சி - அன்வார் பங்கேற்கிறார்

சிகாமட்டில் நடைபெறும் 'ஜோம்! மக்கான் டுரியான்' நிகழ்ச்சி - அன்வார் பங்கேற்கிறார்

பெஸ்டிநெட் நிறுவனர் அமினுலை நாடு கடத்தும் கோரிக்கை விடுக்கப்படவில்லை - உள்துறை அமைச்சர் தகவல்

பெஸ்டிநெட் நிறுவனர் அமினுலை நாடு கடத்தும் கோரிக்கை விடுக்கப்படவில்லை - உள்துறை அமைச்சர் தகவல்