Mar 24, 2026
Thisaigal NewsYouTube
புருணை சுல்தான், கோலாலம்பூர் வந்து சேர்ந்தார்
தற்போதைய செய்திகள்

புருணை சுல்தான், கோலாலம்பூர் வந்து சேர்ந்தார்

Share:

கோலாலம்பூர், ஜூலை 19-

மலேசியாவின் 17 ஆவது மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் அரியணை விழா நாளை சனிக்கிழமை நடைபெறுவதை முன்னிட்டு அவ்விழாவில் கலந்து கொள்வதற்காக புருணை சுல்தான், சுல்தான் ஹசனல் போல்கியா, கோலாலம்பூர் வந்து சேர்ந்துள்ளார்.

புருணை சுல்தானின் சொந்த விமானமான Royal Brunei Boeing 787- 8 விமானம் முற்பகல் 11.55 மணியளவில் சுபாங்கில் உள்ள அரச மலேசிய ஆகாப்படைத் தளத்தில் தரையிறங்கியது.
புருணை சுல்தானை, அரசப் பேராளர்கள் வரவேற்றனர். உடன் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹாசன் காணப்பட்டார்.

Related News