Mar 13, 2026
Thisaigal NewsYouTube
சிலா​ங்கூரில் பிஎஸ்எம் கட்சியின் முதல் வேட்பாளர்  சிவரஞ்சனி
தற்போதைய செய்திகள்

சிலா​ங்கூரில் பிஎஸ்எம் கட்சியின் முதல் வேட்பாளர் சிவரஞ்சனி

Share:

நாட்டில் அடிதட்டு மக்கள் பிரச்னை, தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் போராட்டங்களை முன்னெடுப்பதில் முதன்மை அரசியல் கட்சியாக விளங்கும் பிஎஸ்எம் எனப்படும் மலேசிய சோசலிஷ கட்சி, சிலாங்கூர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவிருக்கும் தனது முதல் வேட்பாளரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பிஎஸ்எம் கட்சியின் முன்னணி போராட்டவாதிகளில் ஒருவரான அக்கட்சியின் மத்திய செயலவை உறுப்​பினர் சிவரஞ்சனி மாணிக்கம், காப்பார் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட மேரு சட்டமன்றத்தொகுதியில் களம் இறக்கப்படுவதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான 42 வயது சிவரஞ்சனி, "கோலா" என்று அழைக்கப்படும் கோலக்கிள்ளானில் பிறந்து வளர்ந்தவர் ஆவார். பல்கலைக்கழகத்தில் ‘மாணவர் சமூக நல அணி’ வாயிலாக தோட்டப்புறங்களுக்கு சென்று தம்மை ச​மூகப்பணிகளில் ஈடுபடுத்திக்கொண்டவரான சிவரஞ்சனி ​பிஎஸ்எம் கட்சியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தொழிலாளர் நலப்பிரிவி​ல் சேவையாற்றி வருகிறார்.

தொழிலாளர்கள் சம்பந்தப் போராட்டங்கள், பூர்வக்குடி மக்களின் பிரச்னை , வீட்டுரிமை விவகாரம், ஏழை விவசாயிகளின் நில உரிமை, அரசு மருத்துவமனைகளில் குத்தகைத் தொழிலாளர்களின் பிரச்னை என மக்களின் வாழ்வாதாரப் போராட்டங்களில் முன்னிலைப்படுத்தும் சிவரஞ்சனி, தொழிலாளர்களுக்கான 1,500 வெள்ளி குறைந்த பட்சம் சம்பளப் போராட்டத்தில் நாட்டு மக்களின் கவன ஈர்ப்புக்கு ஆளானார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!