Jan 21, 2026
Thisaigal NewsYouTube
சிலா​ங்கூரில் பிஎஸ்எம் கட்சியின் முதல் வேட்பாளர்  சிவரஞ்சனி
தற்போதைய செய்திகள்

சிலா​ங்கூரில் பிஎஸ்எம் கட்சியின் முதல் வேட்பாளர் சிவரஞ்சனி

Share:

நாட்டில் அடிதட்டு மக்கள் பிரச்னை, தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் போராட்டங்களை முன்னெடுப்பதில் முதன்மை அரசியல் கட்சியாக விளங்கும் பிஎஸ்எம் எனப்படும் மலேசிய சோசலிஷ கட்சி, சிலாங்கூர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவிருக்கும் தனது முதல் வேட்பாளரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பிஎஸ்எம் கட்சியின் முன்னணி போராட்டவாதிகளில் ஒருவரான அக்கட்சியின் மத்திய செயலவை உறுப்​பினர் சிவரஞ்சனி மாணிக்கம், காப்பார் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட மேரு சட்டமன்றத்தொகுதியில் களம் இறக்கப்படுவதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான 42 வயது சிவரஞ்சனி, "கோலா" என்று அழைக்கப்படும் கோலக்கிள்ளானில் பிறந்து வளர்ந்தவர் ஆவார். பல்கலைக்கழகத்தில் ‘மாணவர் சமூக நல அணி’ வாயிலாக தோட்டப்புறங்களுக்கு சென்று தம்மை ச​மூகப்பணிகளில் ஈடுபடுத்திக்கொண்டவரான சிவரஞ்சனி ​பிஎஸ்எம் கட்சியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தொழிலாளர் நலப்பிரிவி​ல் சேவையாற்றி வருகிறார்.

தொழிலாளர்கள் சம்பந்தப் போராட்டங்கள், பூர்வக்குடி மக்களின் பிரச்னை , வீட்டுரிமை விவகாரம், ஏழை விவசாயிகளின் நில உரிமை, அரசு மருத்துவமனைகளில் குத்தகைத் தொழிலாளர்களின் பிரச்னை என மக்களின் வாழ்வாதாரப் போராட்டங்களில் முன்னிலைப்படுத்தும் சிவரஞ்சனி, தொழிலாளர்களுக்கான 1,500 வெள்ளி குறைந்த பட்சம் சம்பளப் போராட்டத்தில் நாட்டு மக்களின் கவன ஈர்ப்புக்கு ஆளானார்.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல்  விலையில் 2 காசு உயர்வு

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி

பிப்ரவரி முதல் லாலாபோர்ட் (Lalaport) கோலாலம்பூர் - சிங்கப்பூர் விரைவுப் பேருந்து மையமாகச் செயல்படும்: அமைச்சர் அந்தோணி லோக் தகவல்

பிப்ரவரி முதல் லாலாபோர்ட் (Lalaport) கோலாலம்பூர் - சிங்கப்பூர் விரைவுப் பேருந்து மையமாகச் செயல்படும்: அமைச்சர் அந்தோணி லோக் தகவல்