Jun 6, 2026
Thisaigal NewsYouTube
கருகலைப்பில் பெண் உயிரிழந்த வழக்கு: முன்னாள் கிளினிக் ஊழியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது
தற்போதைய செய்திகள்

கருகலைப்பில் பெண் உயிரிழந்த வழக்கு: முன்னாள் கிளினிக் ஊழியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது

Share:

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்ததாக கூறப்படும் கருக்கலைப்பு சம்பவத்தில், பெண் ஒருவரின் உயிரிழப்புக்கு காரணமானதாக நம்பப்படும் முன்னாள் கிளினிக் ஊழியர்கள் இருவர், இன்று கோலாலம்பூர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் அஜர்படுத்தப்பட்டனர்.

83 வயதான பிலோமினா மத்தியாஸ் மற்றும் 73 வயதான ருஸ்பூர் கவுர் பிரதாப் சிங் ஆகியோர், 45 வயது பெண்ணின் மரணத்திற்கு காரணமானதாக இருவரின் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

கடந்த 2024 -ஆம் ஆண்டு, அக்டோபர் 22-ஆம் தேதி, மாலை 5.30 மணியளவில், ஜாலான் சாங்காட் புக்கிட் பிந்தாங் பகுதியில் உள்ள ஒரு கிளினிக்கில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

இவ்வழக்கானது குற்றவியல் சட்டம் பிரிவு 314-ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீதிபதிஇல்லி மரிஸ்கா காலிசான் இருவருக்கும் தலா 3,000 ரிங்கிட் ஜாமீனை ஒருவரின் உத்தரவாதத்துடன் வழங்கி, வழக்கின் அடுத்த விசாரணையை ஜூன் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு