Jun 30, 2026
Thisaigal NewsYouTube
கேபிள் திருடர்களை விரட்டியடித்த பொதுமக்கள் - வைரல் வீடியோ
தற்போதைய செய்திகள்

கேபிள் திருடர்களை விரட்டியடித்த பொதுமக்கள் - வைரல் வீடியோ

Share:

சுபாங் ஜெயா, SS18 குடியிருப்புப் பகுதியில், பட்டப்பகலில் கேபிள்களைத் திருட முயன்ற கும்பல் ஒன்று, பொதுமக்களின் துணிச்சலான எதிர்ப்பால் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் 30 விநாடி காணொளியில், கம்பி வெட்டும் கருவியுடன் வந்த திருடர்கள், கேபிள்களைத் துண்டித்து வாகனங்களில் ஏற்ற முயல்வது தெரிகிறது. அப்போது அங்கிருந்த குடியிருப்பாளர் ஒருவர், "கேபிள் திருடர்கள்... கேபிள் திருடர்கள்..." என்று சத்தமிட்டு அவர்களை நோக்கிச் சென்றார்.

இதனால் அதிர்ச்சியடைந்த திருடர்கள், வெட்டப்பட்ட கேபிள்கள் மற்றும் கருவிகளுடன் தங்களது வாகனங்களில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பினர். அந்த நபர் திருடர்களின் வாகன எண்களையும் உரக்கக் கூறி பதிவு செய்துள்ளார்.

தற்போது சர்வதேச சந்தையில் தாமிரத்தின் விலை அதிகரித்து வருவதால், இத்தகைய திட்டமிட்ட கும்பல்கள் தொலைத்தொடர்பு மற்றும் மின்சாரக் கேபிள்களைக் குறிவைத்துத் திருடி வருகின்றன என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related News

கோவிட் தடுப்பூசிக்கு எதிரான மேல்முறையீடு தள்ளுபடி: கூட்டரசு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கோவிட் தடுப்பூசிக்கு எதிரான மேல்முறையீடு தள்ளுபடி: கூட்டரசு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

இணைய மோசடிகள் தொடர்பாக 1.65 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு ; 45,000 பேர் கைது

இணைய மோசடிகள் தொடர்பாக 1.65 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு ; 45,000 பேர் கைது

சரவாக் மாநிலத்திற்கான சிறப்பு மானியம் உயர்த்தப்படும் - அன்வார் அறிவிப்பு

சரவாக் மாநிலத்திற்கான சிறப்பு மானியம் உயர்த்தப்படும் - அன்வார் அறிவிப்பு

புத்ராஜெயா நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு இல்லை / பெரும்பாலான மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வதாக அன்வார் தகவல்

புத்ராஜெயா நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு இல்லை / பெரும்பாலான மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வதாக அன்வார் தகவல்

பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு: இ-ஹெய்லிங் ஓட்டுநர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்

பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு: இ-ஹெய்லிங் ஓட்டுநர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்

சையத் சித்திக் மீதான வழக்கில் ஜூலை 13-ஆம் தேதிக்கு தீர்ப்பு ஒத்தி வைப்பு

சையத் சித்திக் மீதான வழக்கில் ஜூலை 13-ஆம் தேதிக்கு தீர்ப்பு ஒத்தி வைப்பு