சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு இழுபறி நிலையில் இருந்து வந்த நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் நியமன விவகாரம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது. மாநிலத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் நாளை வியாழக்கிழமை காலை 9 மணிக்கு குவாலா பிலா, இஸ்தானா பெசார் செரி மெனந்தி, பாலைருங் செரி அரண்மனையில் பதவி உறுதிமொழி எடுத்துக்கொள்ளவிருக்கின்றனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நெகிரி செம்பிலான் மாநில சமஸ்தானபதி துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிர் முன்னிலையில் பத்து ஆட்சிக்குழு உறுப்பினர்களும் பதவி உறுதி மொழி எடுத்துக்கொள்வதுடன், ரகசிய காப்புப்பத்திரத்தில் கையெழுத்திடுவர். ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பதவியேற்பு சடங்கிற்கு பிறகு முதலாது ஆட்சிக்குழு கூட்டம் மாநில மந்திரி பெசார், டதுல் செரி அமினுடின் ஹாருன் முன்னிலையில் நடைபெறவிருக்கிறது.
கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி நடைபெற்ற நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலில் 36 தொகுதிகளில் பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் கூட்டணி 31 தொகுதிகளில் வென்றது. பக்காத்தான் ஹராப்பான் 17 தொகுதிகளையும், பாரிசான் நேஷனல் 14 தொகுதிகளையும் கைப்பற்றி, மாநிலத்தில் ஒற்றுமை அரசாங்க ஆட்சிக்கு வித்திட்டுள்ளன.
பாரிசான் நேஷனலை பிரதிநிதித்த அம்னோ அதிகமான தொகுதிகளை வென்ற காரணத்தினால் மாநில ஆட்சிக்குழுவில் அது 6 இடங்களை கொண்டு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


