அதிவேக சக்தியைக் கொண்ட மோட்டார் சைக்கிளை செலுத்திய பெண் ஒருவர், சாலைத் தடுப்பில் மோதி உயிரிழந்தார். இச்சம்பவம், இன்று அதிகாலை 2.40 மணியளவில் செராஸ் - காஜாங் நெடுஞ்சாலையில் நிகழ்ந்தது. வேகக்கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பெண், சாலைத் தடுப்பில் மோதி சம்பவ இடத்திலேயே மாண்டதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் எசிபி முகமட் ஸாயிட் ஹசான் தெரிவித்தார். 36 வயதுடைய அந்தப் பெண், Kawasaki Z10000 ரக மோட்டார் சைக்கிளில் கெப்போங்கிலிருந்து காஜாங், Sungai Long கை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இத்துயரச் சம்பவம் நிகழ்ந்தாக எசிபி முகமட் ஸாயிட் மேலும் விவரித்தார்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி


