அதிவேக சக்தியைக் கொண்ட மோட்டார் சைக்கிளை செலுத்திய பெண் ஒருவர், சாலைத் தடுப்பில் மோதி உயிரிழந்தார். இச்சம்பவம், இன்று அதிகாலை 2.40 மணியளவில் செராஸ் - காஜாங் நெடுஞ்சாலையில் நிகழ்ந்தது. வேகக்கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பெண், சாலைத் தடுப்பில் மோதி சம்பவ இடத்திலேயே மாண்டதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் எசிபி முகமட் ஸாயிட் ஹசான் தெரிவித்தார். 36 வயதுடைய அந்தப் பெண், Kawasaki Z10000 ரக மோட்டார் சைக்கிளில் கெப்போங்கிலிருந்து காஜாங், Sungai Long கை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இத்துயரச் சம்பவம் நிகழ்ந்தாக எசிபி முகமட் ஸாயிட் மேலும் விவரித்தார்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது


