Jul 27, 2026
Thisaigal NewsYouTube
சட்டமன்றத் தேர்தல் தொகுதி பங்கீட்டில் குளறுபடியில்லை
தற்போதைய செய்திகள்

சட்டமன்றத் தேர்தல் தொகுதி பங்கீட்டில் குளறுபடியில்லை

Share:

விரைவில் நடைபெறவிருக்கும் 6 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானுக்கும், பாரிசான் நேஷனலுக்கும் இடையிலான தொகுதி பங்கீட்டில் எந்தவொரு குளறுபடியும் ஏற்படுவதை தாம் விரும்பவில்லை என்று அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார். இதுதான் தேசிய முன்னணியின் நிலைப்பாடு என்று அகமட் ஜாஹிட் குறிப்பிட்டுள்ளார்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றியைத் தேடித் தர முடியாதவர்கள் வேட்பாளர்கள் தேர்வு செய்யும் நிலை ஏற்படுமானால் அதனால் பிரச்னைகள் ஏற்படுவதை தவிர்க்க இவ்விரு கூட்டணிகளுக்கும் இடையில் எந்தவொரு குளறுபடியின்றி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவது அவசியமாகும் என்று துணைப்பிரதமருமான அகமட் ஜாஹிட் குறிப்பிட்டுள்ளார்.

Related News