Mar 23, 2026
Thisaigal NewsYouTube
வாகனப் பட்டறையில் தீ: 40 வாகனங்கள் அழிந்தன
தற்போதைய செய்திகள்

வாகனப் பட்டறையில் தீ: 40 வாகனங்கள் அழிந்தன

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.25-

வாகனப் பட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 40 க்கும் மேற்பட்ட வாகனங்கள் அழிந்தன. இச்சம்பவம் நேற்று இரவு 11.30 மணியளவில் ஷா ஆலாம், செக்‌ஷன் 24 இல் உள்ள வாகன டயர் பட்டறையில் நிகழ்ந்தது.

இந்தச் சம்பவத்தில் பட்டறையின் காவலாளி என்று நம்பப்படும் 30 வயது ஆடவர் சொற்ப தீக்காயங்களுக்கு ஆளாகியுள்ளார்.

ஷா ஆலாம் மற்றும் புக்கிட் ஜெலுத்தோங்கிலிந்து விரைந்த தீயணைப்பு வண்டிகள், பத்துக்கும் மேற்பட்ட வீரர்களின் முழு பலத்துடன் தீயைக் கட்டுப்படுத்தியதாக சிலாங்கூர் மாநில உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

அந்தப் பட்டறை கிட்டத்தட்ட 90 விழுக்காடு அழிந்ததாக அவர் குறிப்பிட்டார்.

Related News

விடுதியில் சக நாட்டுக்காரர் குத்திக்கொலை: நேபாள இளைஞர்  கைது

விடுதியில் சக நாட்டுக்காரர் குத்திக்கொலை: நேபாள இளைஞர் கைது

இடுகாட்டில் ஒழுக்கக்கேடான செயல்: ஜோடி சிக்கியது

இடுகாட்டில் ஒழுக்கக்கேடான செயல்: ஜோடி சிக்கியது

மத்திய கிழக்கு பதற்றத்தால் மாற்றம்: ஆசிய நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மலேசியா

மத்திய கிழக்கு பதற்றத்தால் மாற்றம்: ஆசிய நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மலேசியா

பட்டாசு விபத்து:  பினாங்கில் இனி பட்டாசு விற்பனைக் கடைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்

பட்டாசு விபத்து: பினாங்கில் இனி பட்டாசு விற்பனைக் கடைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்

கெடாவில் அதிக வெப்பம் காரணமாக மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

கெடாவில் அதிக வெப்பம் காரணமாக மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

குழந்தை இறப்பு உட்பட இஇவ்வாண்டில் வெப்பவாதத்துடன் தொடர்புடைய 15 சம்பவங்கள் பதிவு  - சுகாதார அமைச்சு தகவல்

குழந்தை இறப்பு உட்பட இஇவ்வாண்டில் வெப்பவாதத்துடன் தொடர்புடைய 15 சம்பவங்கள் பதிவு - சுகாதார அமைச்சு தகவல்