May 26, 2026
Thisaigal NewsYouTube
டிரெய்லர் லோரியின் கொள்கலன் விழுந்ததில் மாது உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

டிரெய்லர் லோரியின் கொள்கலன் விழுந்ததில் மாது உயிரிழந்தார்

Share:

புக்கிட் மெர்தாஜம், நவ.13-


டிரெய்லர் லோரியின் கொள்கலன், பிடிமானம் விலகி, வாகனங்களின் மீது கழன்று விழுந்ததில் மாது இளம் பெண் உயிரிழந்த வேளையில் மற்றொருவர் கடும் காயங்களுக்கு ஆளாகினார்.

இச்சம்பவம் இன்று காலை 9.31 மணியளவில் பினாங்கு, புக்கிட் மெர்தாஜம், ஜாலான் புக்கிட் தெங்காவில் நிகழ்ந்தது. பெரோடுவா பெஸா, டோயோட்டா அட்லிஸ், ஹாண்டா ஜஸ் மற்றும் ஒரு மூன்று டன் லோரி ஆகியவற்றின் மீது அந்த ராட்ஷச கொள்கலன் விழுந்தது.

இதில் பெரோடுவா பெஸா காரில் பயணித்த 21 வயது லீ ஸி ரோவ் என்ற இளம் பெண், கார் நசுங்கி, சம்பவ இடத்திலேயே மாண்டார். ஹோண்டா ஜஸ் வாகன ஓட்டுநர் காயங்களுடன் உயிர் தப்பினார்.

வாகனமோட்டும் பகுதியில் கொள்கலன் விழுந்ததால் தலையில் கடுமையான காயங்களுக்கு ஆளாகி அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே மாண்டார். அவரின் உடலை மீட்பதற்கு தீயணைப்பு, மீட்புப்படையினர் இரண்டு பாரந்தூக்கி இயந்திரங்களைப் பயன்படுத்தினர் என்று பண்டார் பெர்டா தீயணைப்பு, மீட்புப்படை நிலைய கமாண்டர் முகமட் நோர் அஸாமுடீன் தெரிவித்தார்.

Related News

கோலாலம்பூர் ஹோட்டலில் போதை மற்றும் ஓரினச்சேர்க்கை நடவடிக்கைகள் - 51 ஆடவர்கள் கைது

கோலாலம்பூர் ஹோட்டலில் போதை மற்றும் ஓரினச்சேர்க்கை நடவடிக்கைகள் - 51 ஆடவர்கள் கைது

"சிறைச்சுவர்களுக்குள் நடந்த கொடூரத் தாக்குதல்" - தைப்பிங் சிறை அதிகாரிகள் பதவி விலக கெப்போங் எம்பி வலியுறுத்து

"சிறைச்சுவர்களுக்குள் நடந்த கொடூரத் தாக்குதல்" - தைப்பிங் சிறை அதிகாரிகள் பதவி விலக கெப்போங் எம்பி வலியுறுத்து

22 வயது இளைஞர் அருண்குமார் கொலை - நீதி கேட்டு குடும்பத்தினர் கோரிக்கை

22 வயது இளைஞர் அருண்குமார் கொலை - நீதி கேட்டு குடும்பத்தினர் கோரிக்கை

பாங்கியில் கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடைய இருவர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்

பாங்கியில் கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடைய இருவர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்

அரசு கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால் பிரதமரின் வெறுப்புணர்வுக்கு எதிரான அறைகூவல்  வீணாகிவிடும்

அரசு கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால் பிரதமரின் வெறுப்புணர்வுக்கு எதிரான அறைகூவல் வீணாகிவிடும்

கோலாலம்பூரில் பலத்த மழை: மரங்கள் விழுந்து கார்கள் சேதம்; போக்குவரத்து பாதிப்பு

கோலாலம்பூரில் பலத்த மழை: மரங்கள் விழுந்து கார்கள் சேதம்; போக்குவரத்து பாதிப்பு