Dec 15, 2025
Thisaigal NewsYouTube
ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் சிறப்புக் கூட்டம்  ஒத்திவைப்பு
தற்போதைய செய்திகள்

ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் சிறப்புக் கூட்டம் ஒத்திவைப்பு

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.15-

நாளை டிசம்பர் 16 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கோலாலம்பூரில் நடைபெறவிருந்த ஆசியான் வெளியுறவு அமைச்சர்களுக்கான சிறப்புக் கூட்டம், வரும் டிசம்பர் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் ஹசான் அறிவித்துள்ளார்.

எல்லைத் தகராறு தொடர்பில் தாய்லாந்துக்கும், கம்போடியாவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள நடப்பு நெருக்கடியைக் கருத்தில் கொண்டு தாய்லாந்து கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த சிறப்புக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக முகமட் ஹசான் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள நடப்பு நெருக்கடி தொடர்பில் பிரச்னையை கையாளும் விதமாக கடந்த டிசம்பர் 11 ஆம் தேதி கம்போடியா பிரதமர் Hun Manet மற்றும் தாய்லாந்து பிரதமர் Anutin Charnvirakul ஆகியோருடன் ஆசியான் தலைவர் என்ற முறையில் மலேசியப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பேசினார்.

அந்த பேச்சின் விளைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக முகமட் ஹசான் தெரிவித்தார்.

Related News

எம்சிஎம்சி  நடவடிக்கையை வரவேற்றார் போலீஸ் படைத் தலைவர்

எம்சிஎம்சி நடவடிக்கையை வரவேற்றார் போலீஸ் படைத் தலைவர்

மலாக்கா போலீஸ் தலைவர் வெளியிட்டது பொய்யான அறிக்கையாகும்: புதிய ஆதாரங்களுடன் வாதிட்டடார் அருண் துரைசாமி

மலாக்கா போலீஸ் தலைவர் வெளியிட்டது பொய்யான அறிக்கையாகும்: புதிய ஆதாரங்களுடன் வாதிட்டடார் அருண் துரைசாமி

மலாக்கா மாநில போலீஸ் தலைவர் ஸுல்கைரி முக்தார் விடுப்பில் அனுப்பப்பட வேண்டும்

மலாக்கா மாநில போலீஸ் தலைவர் ஸுல்கைரி முக்தார் விடுப்பில் அனுப்பப்பட வேண்டும்

விபத்தில் இளைஞருக்கு மரணம் விளைவித்ததாக போலீஸ்காரர் மீது குற்றச்சாட்டு

விபத்தில் இளைஞருக்கு மரணம் விளைவித்ததாக போலீஸ்காரர் மீது குற்றச்சாட்டு

வர்த்தகர் ஆல்பெர்ட் தே துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்டாரா? விசாரணையைத் தொடங்கியது போலீஸ் துறை

வர்த்தகர் ஆல்பெர்ட் தே துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்டாரா? விசாரணையைத் தொடங்கியது போலீஸ் துறை

மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்: புக்கிட் அமான் சி.ஐ.டி. தலைவர் டத்தோ குமாரிடமிருந்து கைநழுவியதா?

மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்: புக்கிட் அமான் சி.ஐ.டி. தலைவர் டத்தோ குமாரிடமிருந்து கைநழுவியதா?

ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் சிறப்புக்கூட்டம் ஒத்திவைப்பு | Thisaigal News