Mar 13, 2026
Thisaigal NewsYouTube
இயக்கவாதி சித்தி காசிமை கொல்ல முயற்சி
தற்போதைய செய்திகள்

இயக்கவாதி சித்தி காசிமை கொல்ல முயற்சி

Share:

இயக்கவாதியும், மனித உரிமை போராட்டவாதியமான வழக்கறிஞர் சித்தி காசிமின் காரின் அடிப்பாகத்தில் நாட்டு வெடிகுண்டு வைக்கப்பட்ட சம்பவமானது, ஒரு கொலை முயற்சியாகும் என்று போலீஸ் படைத் தலைவர் தான் ஶ்ரீ ரசாருடின் ஹுசெயின் தெரிவித்துள்ளார்.

இந்த சதிநாச வேலையை செய்த சந்தேகப்பேர்வழியை தேடும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். குறிப்பாக, அந்த வெடிகுண்டில் பதிவாகிய கைரேகை மற்றும் இதர ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு சந்தேகப் பேர்வழியை போலீசார் தேடி வருவதாக ஐஜிபி குறிப்பிட்டார்.

காரின் அடியில் வெடிகுண்டு பொறுத்தப்படுவது மிக கடுமையான குற்றமாகும். இது கொலை செய்யும் முயற்சியாகும் என்று ரசாருடின் ஹுசெயின் கூறினார். கடந்த வாரம், கோலாலம்பூர்,பங்சார், ஜாலான் மாரூஃபில் உள்ள கார் பட்டறைக்கு தனது காரை அனுப்பி வைத்த சித்தி காசிம், காரின் அடிப்பாகத்தில் வெடிபொருளைப் போல இரு பொருட்கள் கட்டப்பட்டுள்ளதாக கார் பட்டறை மெக்கானிக்கிடமிருந்துகிடைக்கப் பெற்ற அழைப்பைத் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து சித்தி காசிம் போலீசில் புகார் செய்தார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!