Jan 22, 2026
Thisaigal NewsYouTube
இயக்கவாதி சித்தி காசிமை கொல்ல முயற்சி
தற்போதைய செய்திகள்

இயக்கவாதி சித்தி காசிமை கொல்ல முயற்சி

Share:

இயக்கவாதியும், மனித உரிமை போராட்டவாதியமான வழக்கறிஞர் சித்தி காசிமின் காரின் அடிப்பாகத்தில் நாட்டு வெடிகுண்டு வைக்கப்பட்ட சம்பவமானது, ஒரு கொலை முயற்சியாகும் என்று போலீஸ் படைத் தலைவர் தான் ஶ்ரீ ரசாருடின் ஹுசெயின் தெரிவித்துள்ளார்.

இந்த சதிநாச வேலையை செய்த சந்தேகப்பேர்வழியை தேடும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். குறிப்பாக, அந்த வெடிகுண்டில் பதிவாகிய கைரேகை மற்றும் இதர ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு சந்தேகப் பேர்வழியை போலீசார் தேடி வருவதாக ஐஜிபி குறிப்பிட்டார்.

காரின் அடியில் வெடிகுண்டு பொறுத்தப்படுவது மிக கடுமையான குற்றமாகும். இது கொலை செய்யும் முயற்சியாகும் என்று ரசாருடின் ஹுசெயின் கூறினார். கடந்த வாரம், கோலாலம்பூர்,பங்சார், ஜாலான் மாரூஃபில் உள்ள கார் பட்டறைக்கு தனது காரை அனுப்பி வைத்த சித்தி காசிம், காரின் அடிப்பாகத்தில் வெடிபொருளைப் போல இரு பொருட்கள் கட்டப்பட்டுள்ளதாக கார் பட்டறை மெக்கானிக்கிடமிருந்துகிடைக்கப் பெற்ற அழைப்பைத் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து சித்தி காசிம் போலீசில் புகார் செய்தார்.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல்  விலையில் 2 காசு உயர்வு

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி

பிப்ரவரி முதல் லாலாபோர்ட் (Lalaport) கோலாலம்பூர் - சிங்கப்பூர் விரைவுப் பேருந்து மையமாகச் செயல்படும்: அமைச்சர் அந்தோணி லோக் தகவல்

பிப்ரவரி முதல் லாலாபோர்ட் (Lalaport) கோலாலம்பூர் - சிங்கப்பூர் விரைவுப் பேருந்து மையமாகச் செயல்படும்: அமைச்சர் அந்தோணி லோக் தகவல்