திரெங்கானு, கெமாமான், கம்போங் ஆயிர் புத்தெஹ், ஜெராம் ஆயிர் புத்தெஹ் என்ற நீர் வீழ்ச்சியில் குளித்துக்கொண்டு இருந்த போது, மலை முகட்டிலிருந்து திடிரென்று பாய்ந்த கடும் நீரோட்டத்தினால் அடித்துச்செல்லப்பட்ட 10 பேரில் மேலும் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இன்று காலை 7.45 மணியளவில் உள்ளூர் மக்களால் அந்த சடலம் கண்டு பிடிக்கப்பட்டது. இத்தடன் நீரில் மூழ்கியவர்களின் எழுவரின் சடலங்கள் மீட்கப்பட்ட வேளையில் மேலும் மூவர் தேடப்பட்டு வருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த இச்சம்பவத்தில் பத்து பேர் நீரில் மூழ்கியதாக அறிவிக்கப்பட்டது. ஆகக்கடைசியாக இன்று மீட்கப்பட்ட நபரின் சடலம், சம்பவம் நிகழ்ந்த இடத்திலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் கண்டு பிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். எஞ்சியவர்களை மீட்பதற்கு தொடர்ந்து மீட்பு நடவடிக்கை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

மலாய் மொழி மற்றும் வரலாறு பாடத் தேவைகள் குறித்து ஃபாட்லீனாவுடன் டோங் சோங் சந்திப்பு நடத்த விருப்பம்

6 வீடுகளுக்குத் தீ வைப்பு: வேலையற்ற நபர் மீது குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தில் பேசிக் கொண்டிருந்த இரு துணை அமைச்சர்களைக் கண்டித்த துணைச் சபாநாயகர்

முதலாம் ஆண்டில் சேர்வதற்கு முன்பாக 6 வயது மாணவர்களுக்குச் சிறப்பு சோதனை - கல்வி அமைச்சர் தகவல்

8 ரிங்கிட் முன்பணம் செலுத்த முயன்று 8,800 ரிங்கிட் இழப்பு: வாட்ஸ்அப் இணைப்பை கிளிக் செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்


