May 5, 2026
Thisaigal NewsYouTube
அலோர் காஜாவில் 6 வயது சிறுவன் வெந்நீர் ஊற்றுக் குளத்தில் மூழ்கி பலி
தற்போதைய செய்திகள்

அலோர் காஜாவில் 6 வயது சிறுவன் வெந்நீர் ஊற்றுக் குளத்தில் மூழ்கி பலி

Share:

அலோர் காஜா, பிப்ரவரி.03-

அலோர் காஜா, காடேக் பகுதியில் உள்ள ஒரு வெந்நீர் ஊற்றுக் குளத்தில் ஆறு வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதிவாசிகளைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சம்பவத்தின் போது அச்சிறுவன், அங்கிருந்த பொழுதுபோக்கு மையத்தில் உள்ள பெரியவர்கள் பயன்படுத்தும் குளத்தில் மயங்கிய நிலையில் மிதந்து கொண்டிருந்ததாக நம்பப்படுகின்றது.

இந்நிலையில் தகவல் தெரிந்தவுடன், அருகாமையில் இருந்த தன்னார்வ மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று நீரில் மூழ்கிய சிறுவனுக்குச் சிகிச்சையளித்துள்ளனர்.

அதே வேளையில், அலோர் காஜா மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்ட அச்சிறுவனுக்கு அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.

என்றாலும், சிகிச்சைப் பலனின்றி இரவு 8.24 மணியளவில் அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சிறுவனின் சடலமானது சவப்பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், அவரது தாயார் மற்றும் உறவினரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

Related News

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்