Mar 31, 2026
Thisaigal NewsYouTube
அம்புலன்ஸ் வண்டி தடம்புரண்டது, ஓட்டுநரும், உதவியாளரும் காயம்
தற்போதைய செய்திகள்

அம்புலன்ஸ் வண்டி தடம்புரண்டது, ஓட்டுநரும், உதவியாளரும் காயம்

Share:

கெடா, கூலிம், ஜாலான் லெபோ ஹை தெக் சாலை சந்திப்பின் சமிக்ஞை விளக்குப்பகுதியில் கார் ஒன்றுடன் மோதி, தடம்புரண்ட அம்புலன்ஸ் வண்டியின் ஓட்டுநரும், மருத்துவ உதவியாளரும் காயம் அடைந்தனர்.

33 வயதுடைய நபர் செலத்திய அந்த தனியார் அம்புலன்ஸ் வண்டியில் அதிர்ஷ்டவசமாக நோயாளிகள் யாரும் ஏற்றப்படவில்லை.

நேற்று இரவு 8.20 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் பினாங்கு, பண்டர் பெர்டாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சொந்தமான அந்த அம்புலன்ஸ் வண்டி, கூலிம் மருத்துவமனையில் நோயாளி ஒருவரை ஏற்றிச்செல்வதற்காக வந்து கொண்டிருந்த போது சமிக்ஞை விளக்குப்பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூலிம் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்ட். சுல்கிப்ளி அஸிஸான் தெரிவித்தார்.

எதிர்திசையை நோக்கி 19 வயது நபர் செலுத்திய பெர்சோனா ரக கார், அந்த அம்புலன்ஸ் வண்டியின் பின்புறம் மோதியதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பந்தப்ட்ட ஆடவருக்கு வாகனமோட்டும் உரிமம் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related News

"பிகேஆர் கொள்கைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறேன்" - ராஜினாமா வதந்திகளுக்கு மத்தியில் நூருல் இசா அறிக்கை

"பிகேஆர் கொள்கைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறேன்" - ராஜினாமா வதந்திகளுக்கு மத்தியில் நூருல் இசா அறிக்கை

UKM வளாகத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட ஆலயம்: சிலாங்கூர் அரசின் முடிவிற்காகக் காத்திருக்கும் பல்கலைக்கழகம்

UKM வளாகத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட ஆலயம்: சிலாங்கூர் அரசின் முடிவிற்காகக் காத்திருக்கும் பல்கலைக்கழகம்

ஹைடெக் பார்க் தொழிலாளர்கள் விவகாரம்:  தொழிற்சாலை பொறுப்பாளர்களிடம் விளக்கம் கேட்கிறது மாநில குடிநுழைவுத் துறை

ஹைடெக் பார்க் தொழிலாளர்கள் விவகாரம்: தொழிற்சாலை பொறுப்பாளர்களிடம் விளக்கம் கேட்கிறது மாநில குடிநுழைவுத் துறை

"சிறார் இல்லத்தில் சிறுவர்கள் 20 பேருக்குப் பாலியல் வன்கொடுமை: உரிமையாளர் மற்றும் நண்பர்களின் வக்கிரச் செயல் அம்பலம்!" நால்வர் கைது

"சிறார் இல்லத்தில் சிறுவர்கள் 20 பேருக்குப் பாலியல் வன்கொடுமை: உரிமையாளர் மற்றும் நண்பர்களின் வக்கிரச் செயல் அம்பலம்!" நால்வர் கைது

அத்துமீறி நுழைந்த புகாரில் ஊடகவியலாளர் உட்பட 10 பேர் கைது: கெடா மாநில போலீஸ் தலைவர் விளக்கம்

அத்துமீறி நுழைந்த புகாரில் ஊடகவியலாளர் உட்பட 10 பேர் கைது: கெடா மாநில போலீஸ் தலைவர் விளக்கம்

 கோலாலம்பூரில் பலத்த காற்றுடன் கனமழை; 6 இடங்களில் மரங்கள் விழுந்து பாதிப்பு

கோலாலம்பூரில் பலத்த காற்றுடன் கனமழை; 6 இடங்களில் மரங்கள் விழுந்து பாதிப்பு