Aug 2, 2026
Thisaigal NewsYouTube
பண்டமாரான், பங்களா வீட்டில் நடந்த கொள்ளை / 10 பேரும் வளைத்துப்பிடிக்கப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

பண்டமாரான், பங்களா வீட்டில் நடந்த கொள்ளை / 10 பேரும் வளைத்துப்பிடிக்கப்பட்டனர்

Share:

கிள்ளான்,அக்டோபர் 07-

கடந்த சில ஆண்டுளாக சிலாங்கூரிலும், நெகிரி செம்பிலானிலும் பாராங்கை ஆயுதமேந்திய நிலையில் வீடு புகுந்து கொள்ளையடித்து வந்த மிக ஆபத்தானவர்கள் என்று நம்பப்படும் ஒரு கொள்ளைக் கும்பலை தாங்கள் வெற்றிகரமான முறியடித்துள்ளதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ உசேன் உமர் கான் தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை அதிகாலையில் கிள்ளான், பண்டமாரானில் உள்ள ஓர் இந்தியருக்கு சொந்தமான பங்களா வீட்டில் நடந்த ஆயதமேந்திய துணிகர கொள்ளைச்சம்பபவத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் 10 ஆடவர்களும் பிடிபட்டுள்ளனர்.

இந்த கொள்ளைக்கும்பல் மிகவும் ஆபத்தானவர்கள் என்று நம்பப்படுகிறது. தாங்கள் கொள்ளையடிக்கும் வீடுகளை குறிப்பாக எளிதாக நுழையக்கூடிய வீடுகளை முன்கூட்டியே அடையாளம் கண்ட பின்னர் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளது.

சம்பந்தப்பட்ட கும்பல் பிடிபட்டது மூலம் அந்த பங்களா வீட்டிலிருந்து களவாடப்பட்ட விலை உயர்ந்த சாமி சிலைகள் உட்பட பல பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

ஒரு பெண் உட்பட 10 பேருக்கு எதிராக கடந்த அக்டேபார் 3 ஆம் தேதி தொடங்கப்பட்ட Op Casa நடவக்கையின் மூலம் பிடிபட்டுள்ளனர். 23 க்கும் 46 க்கும் இடைப்பட்ட வயதுடைய அவர்கள் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக டத்தோ ஹுசைன் ஓமர் குறிப்பிட்டார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

பண்டமாரான், பங்களா வீட்டில் நடந்த கொள்ளை / 10 பேரும் வளைத... | Thisaigal News