ஹோட்டல் அறை ஒன்றில் பெண் ஒருவருடன் மிக நெருக்கமாக இருப்பதைப் போல தமது படத்தை சமூக வலைத் தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள உள்ளடக்கத்தை முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் முன்னாள் சிறப்பு அதிகாரி சாமில் இப்ராஹிம் மறுத்துள்ளார்.
தமக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டை வன்மையாக மறுத்த சாமில், இது தொடர்பாக கோல மூடா மாவட்ட போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு வெவ்வேறு ஹோட்டல்களில் தங்கியிருந்த காட்சிகள், அந்த புகைப்படத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக சாமில் குற்றஞ்சாட்டினார்.








