ஆறாண்டுகளுக்கு முன்பு ஜொகூர் பாருவில், சாலை ஓரத்தில் பெரும் கும்பலாக இருந்த சிறார்களைக் காரினால் மோதித் தள்ளி, எண்மருக்கு மரணம் விளைவித்த குற்றத்திற்காக ஆறாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பெண் குமாஸ்தா ஒருவரை புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது.
மிக அபாயக்கரமாக காரைச் செலுத்தியதற்காக ஆறாண்டு சிறைத் தண்டனையும், 6 ஆயிரம் வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்ட பெண் குமாஸ்தாவான சம் கெ திங்கிற்கு எதிரான சிறைத் தண்டனையையும் அபராதத்தையும் ரத்து செய்வதாக மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமை ஏற்ற நீதிபதி ஹடாரியா சைட் இஸ்மாயில் தெரிவித்தார்.
2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி, அதிகாலை 3 மணியளவில், கைக்கால்களை நீட்டிக்கொண்டு, சைக்கிளில் படுத்தவாறு சவாரி செய்யும் 'பசிகால் லாஜாக்' சாகசத்தில் பங்குக்கொண்டதாக நம்பப்படும் சிறார்கள் சம்பந்தப்பட்ட இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்ததுடன் மேலும் ஆறு பேர் கடுமையான காயங்களுக்கு ஆளாகினர்.
இவ்வழக்கில், பெண் குமாஸ்தா சம் கெ திங்கை ஜொகூர் பாரு, மஜிஸ்திரேட் நீதிமன்றம் விடுதலை செய்த போதிலும், உயர் நீதிமன்றம் அவருக்கு ஆறாண்டு சிறைத் தண்டனையும் அபராதமும் விதித்தது.
இத்தண்டனையை எதிர்த்து அந்தப் பெண் குமாஸ்தா மேல் முறையீடு செய்தார். அதிகாலை நேரத்தில், சாலையில் சிறார்களுக்கு என்ன வேலை? என்ற கேள்வி இவ்வழக்கில் முதன்மையாக வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


