Jun 15, 2026
Thisaigal NewsYouTube
பெண் குமாஸ்தா விடுதலை
தற்போதைய செய்திகள்

பெண் குமாஸ்தா விடுதலை

Share:

ஆறாண்டுகளுக்கு முன்பு ஜொகூர் பாருவில், சாலை ஓரத்தில் பெரும் கும்பலாக இருந்த சிறார்களைக் காரினால் மோதித் தள்ளி, எண்மருக்கு மரணம் விளைவித்த குற்றத்திற்காக ஆறாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பெண் குமாஸ்தா ஒருவரை புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது.

மிக அபாயக்கரமாக காரைச் செலுத்தியதற்காக ஆறாண்டு சிறைத் தண்டனையும், 6 ஆயிரம் வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்ட பெண் குமாஸ்தாவான சம் கெ திங்கிற்கு எதிரான சிறைத் தண்டனையையும் அபராதத்தையும் ரத்து செய்வதாக மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமை ஏற்ற நீதிபதி ஹடாரியா சைட் இஸ்மாயில் தெரிவித்தார்.

2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி, அதிகாலை 3 மணியளவில், கைக்கால்களை நீட்டிக்கொண்டு, சைக்கிளில் படுத்தவாறு சவாரி செய்யும் 'பசிகால் லாஜாக்' சாகசத்தில் பங்குக்கொண்டதாக நம்பப்படும் சிறார்கள் சம்பந்தப்பட்ட இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்ததுடன் மேலும் ஆறு பேர் கடுமையான காயங்களுக்கு ஆளாகினர்.

இவ்வழக்கில், பெண் குமாஸ்தா சம் கெ திங்கை ஜொகூர் பாரு, மஜிஸ்திரேட் நீதிமன்றம் விடுதலை செய்த போதிலும், உயர் நீதிமன்றம் அவருக்கு ஆறாண்டு சிறைத் தண்டனையும் அபராதமும் விதித்தது.
இத்தண்டனையை எதிர்த்து அந்தப் பெண் குமாஸ்தா மேல் முறையீடு செய்தார். அதிகாலை நேரத்தில், சாலையில் சிறார்களுக்கு என்ன வேலை? என்ற கேள்வி இவ்வழக்கில் முதன்மையாக வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்