ஜோகூர், பொந்தியானில் வீடு புகுந்து கொள்ளையிட்டதாக நம்பப்படும் முன்னாள் கால்பந்தாட்ட வீரர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். சூப்பர் லீக் கால்பந்தாட்டப் போட்டி உட்பட நாட்டின் முன்னணிக் குழுக்களுக்கு விளையாடிய 33 வயதுடைய அந்த கால்பந்தாட்ட வீரர் பெனுட்டில் உள்ள ஒரு வீட்டில் நுழைந்து பல ஆயிரம் வெள்ளி பெறுமானமுள்ள பொருட்களை களவாடியது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
சந்தேகத்திற்கு இடமாக நடந்து கொண்ட அந்த கால்பந்தாட்ட வீரரை தடுத்து போலீசார் விசாரணை செய்த போது அவர் வீடு புகுந்து கொள்ளையிட்ட விவகாரம் தெரியவந்துள்ளது. அந்த வீரர் கைது செய்யப்பட்டதை பொந்தியான் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் அப்துல் ஹாமிட் அப்துல் ரஹ்மான் உறுதிபடுத்தியள்ளார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


