ஜோகூர், பொந்தியானில் வீடு புகுந்து கொள்ளையிட்டதாக நம்பப்படும் முன்னாள் கால்பந்தாட்ட வீரர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். சூப்பர் லீக் கால்பந்தாட்டப் போட்டி உட்பட நாட்டின் முன்னணிக் குழுக்களுக்கு விளையாடிய 33 வயதுடைய அந்த கால்பந்தாட்ட வீரர் பெனுட்டில் உள்ள ஒரு வீட்டில் நுழைந்து பல ஆயிரம் வெள்ளி பெறுமானமுள்ள பொருட்களை களவாடியது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
சந்தேகத்திற்கு இடமாக நடந்து கொண்ட அந்த கால்பந்தாட்ட வீரரை தடுத்து போலீசார் விசாரணை செய்த போது அவர் வீடு புகுந்து கொள்ளையிட்ட விவகாரம் தெரியவந்துள்ளது. அந்த வீரர் கைது செய்யப்பட்டதை பொந்தியான் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் அப்துல் ஹாமிட் அப்துல் ரஹ்மான் உறுதிபடுத்தியள்ளார்.

Related News

மலாய் மொழி மற்றும் வரலாறு பாடத் தேவைகள் குறித்து ஃபாட்லீனாவுடன் டோங் சோங் சந்திப்பு நடத்த விருப்பம்

6 வீடுகளுக்குத் தீ வைப்பு: வேலையற்ற நபர் மீது குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தில் பேசிக் கொண்டிருந்த இரு துணை அமைச்சர்களைக் கண்டித்த துணைச் சபாநாயகர்

முதலாம் ஆண்டில் சேர்வதற்கு முன்பாக 6 வயது மாணவர்களுக்குச் சிறப்பு சோதனை - கல்வி அமைச்சர் தகவல்

8 ரிங்கிட் முன்பணம் செலுத்த முயன்று 8,800 ரிங்கிட் இழப்பு: வாட்ஸ்அப் இணைப்பை கிளிக் செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்


